கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: ஆனந்தம்

ஆண்டு:2001

பாடகர்கள் : உன்னிமேனன் மற்றும் சுஜாதா

இசை : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : தொல்காப்பியன்

✨✨✨✨✨✨✨✨

குழு : ஒரு ஜோடி புறா வந்திருச்சு…

சரி ஸத பத சரி… சரி ஸத பத சரி…

சாமந்தி வாசத்தில் ரெண்டும்

சந்தனத்தை பூசிக்கிச்சு…

சரி ஸத பத சரி… சரி ஸத பத சரி…

ஆண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்

கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்

கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

அழியாதது காதல் கோலம்

ஓயாமலே கேட்கும் காதில் மேள நாயனம்

ஆண் : நீயோ ஏற்றும் தீபத்தில் கார்த்திகை நாளும்

வீட்டுக்குள் வர வேண்டும்

எந்தன் தோட்டத்து பூவுக்கும் பூக்கும் ஆசை

உன்னால் எழ வேண்டும்….

பெண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்

கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

பெண் : தண்ணிர் குடத்தில் ஞாபகம் நிரப்பி

வாசல் எங்கும் தெளிப்பேனே

ஆண் : நீயிட்ட கோலம் தொலைவினில் நின்றே

யாரோ போல ரசிப்பேனே

பெண் : ஜீவநதி ஏங்கும்……

ஆண் : ஏங்கும்….

பெண் : அடி மனசு பொங்கும்

ஆண் : நெஞ்சுக்குழி எங்கும்…..

பெண் : எங்கும்….

ஆண் : உன் நினைவு தங்கும்

பெண் : நீ முகம் பார்க்கிற கண்ணாடிக்கு

முத்தங்களால் அர்ச்சனைகள் செய்வேன்

ஆண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்

பெண் : கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

பெண் : மனைவியான நிமிஷத்திலிருந்து

உன்னை பேர் சொல்லி அழைப்பேனே

ஆண் : தூங்கும் போதும் உன் பேர் கேட்டால்

துள்ளி எழுந்து பார்ப்பேனே

பெண் : குளியலறை பக்கம்…..

ஆண் : பக்கம்…

பெண் : தலை துவட்ட வருவேன்

ஆண் : படுக்கையினில் மிச்சம்…..

பெண் : மிச்சம்…

ஆண் : வைத்து அங்கே தருவேன்

ஆண் : வளையோசையால் சைகை காட்டுவேன்

தயங்காமலே தேவை யாவும் கேட்பேன்

பெண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்

ஆண் : கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

பெண் : அழியாதது காதல் கோலம்

ஆண் : ஓயாமலே கேட்கும் காதில் மேள நாயனம்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்