ஆகாச நிலவுதான் அழகாத் தெரியல

 ✨✨✨✨✨✨✨✨

தந்தை பிள்ளை மீது வைத்திருக்கும் கனவு இப்பாடல்.

✨✨✨✨✨✨✨✨

படம் :   'மஞ்சப்பை'  பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், இசை: என்.ஆர். ரகுநந்தன்

வரிகள் :யுகபாரதி 

✨✨✨✨✨✨✨✨

பல்லவி:

ஆகாச நிலவுதான் அழகாத் தெரியல

ஆணிமுத்து அதுவுமே அழகாத் தெரியல

உன்னைப் போல அழகுதான்

ஒண்ணுமில்ல உலகிலே

ஒட்டுமொத்த அழகையும் 

கொண்ட நீயும்உசுரிலே...

சாமி கொடுத்த வரமே நீதானே எனக்கு ராசா

நிண்டு வாழ்ந்து காட்ட வேணும்

இந்த புவியில் ரொம்ப பெருசா

ஆகாச நிலவுதான் அழகாத் தெரியல..

✨✨

சரணம் 1:

சூரியனை கேளு வாங்கி நான் தருவேன்

சந்திரனை கேளு கொண்டு நான் வருவேன்

வங்கக் கடலை நீ சின்னக் குவளையில்

மொண்டு வரச்சொல்லு செஞ்சிடுவேன்

சிங்கம் சிறுத்தையை ஒத்த அடியில

கொன்னு வரச்சொல்லு 

செஞ்சிடுவேன் 

உலகே அழிஞ்சாலும் உன்ன நான் காத்திடுவேன் 

என்னோட பெருமை என்ன உன் உருவில் பார்த்திடுவேன் 

ஆகாச நிலவு தான்.....

எப்போவுமே நீ தான் என்னோட ஆவி 

பட்டம் பல வாங்கி ஆகணும் மேதாவி 

உன்னைவிட ஒரு சொத்து சொகம் இந்த மண்ணில் இல்லையின்னு சொல்லிடுவேன் 

கண்ணு மணி என ஒன்ன நினைச்சு நான் கையில் எடுத்து தான் கொஞ்சிடுவேன் 

எதையும் உனக்காக சுளுவா செஞ்சிடுவேன் 

ஒத்த நொடி பிரிய சொன்னா இறந்தே போயிடுவேன் 

ஆகாச நிலவுதான் அழகாத் தெரியல

ஆணிமுத்து அதுவுமே அழகாத் தெரியல

உன்னைப் போல அழகுதான்

ஒண்ணுமில்ல உலகிலே

ஒட்டுமொத்த அழகையும் 

கொண்ட நீயும் உசுரிலே...

சாமி கொடுத்த வரமே நீதானே எனக்கு ராசா

நிண்டு வாழ்ந்து காட்ட வேணும்

இந்த புவியில் ரொம்ப பெருசா

✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்