இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ இவள் யாரோ

 ✨✨✨✨✨✨✨✨✨

அதிகம்  கேட்டிராத பாடல்.  

இசைஞானி படைப்பில்,

அருண்மொழி -S.ஜானகி  அவர்கள் குரலில், 

கவிஞர் வாலி வரிகளில்

✨✨✨✨✨✨✨✨✨

படம்:ராஜாவின் பார்வையிலே

ஆண்டு:1995

பாடகர்கள் : 

அருண் மொழி மற்றும் எஸ். ஜானகி

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : இவள் யாரோ

வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ

என்னப் பேரோ

வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ

பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல

என்றென்றும் வாழும் காதல்

நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல

நெஞ்சுக்குள் ஊறும் பாடல்

ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை

இவள் யாரோ

வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ

இவள் யாரோ

ஆண் : காதல் வாழ்வு கானல் என்று

நேற்றுப் பேசினேன்

காதலே தெய்வீகம் என்று

இன்று போற்றினேன்

பெண் : காலை மாலை உன்னை எண்ணி

உள்ளம் வாடினேன்

ஆசைகள் கை கூடும்

இந்த நாளை வாழ்த்தினேன்

ஆண் : கண்ணே பசும் பொன்னே

பெண் : ஹ்ம்ம் ம்ம்…..

ஆண் : வந்தேன் உந்தன் பின்னே

பெண் : கண்ணா மணிவண்ணா

உன் பேர் தினம் சொன்னேன்

உனைக் கண்டேன் கனிந்தேன்

ஆண் : இவள் யாரோ

வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ

என்னப் பேரோ

வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ

பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல

என்றென்றும் வாழும் காதல்

ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை

ஆண் : இவள் யாரோ

வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ

பெண் : தேவன் உந்தன் தேரும் எந்தன்

வாசல் வந்ததே

தேவியை கையோடு அள்ளி சொந்தம் கொண்டதே

ஆண் : நேரம் காலம் கூடும் போது

நேசம் வென்றதே

நாயகி உன் தோற்றம் இந்த நெஞ்சில் நின்றதே

பெண் : இன்பம் இந்த இன்பம் இன்னும் பல ஜென்மம்

ஆண் : பொங்கும் இனி பொங்கும் செந்தேன் இதழ் எங்கும்

அதில் என்னை இழந்தேன்

ஆண் : இவள் யாரோ

வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ

என்னப் பேரோ

வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ

பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல

என்றென்றும் வாழும் காதல்

நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல

நெஞ்சுக்குள் ஊறும் பாடல்

ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை

ஆண் : இவள் யாரோ

வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ

இவள் யாரோ

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்