வேல் மாறல்

 அருணகிரி நாதர் அருளிய ‘வேல் வகுப்பு’ எனும் திருப்புகழை வள்ளிமலை ஸ்ரீ சச்சிதாநந்த ஸ்வாமிகள் ‘வேல் மாறல்’ எனும் பாராயணமாக மாற்றி அதை ஒரு மகா மந்திரமாக அருளிச் செய்திருக்கிறார். இது ஒரு மாபெரும் மருந்தும்கூட.

✨✨✨✨✨✨✨✨✨

வேல்மாறல் மகா மந்திரம் : அதிவேகமாக பலன் தரும் முருகன் மந்திரம்

முருகப் பெருமானின் அருளை மிக வேகமாக பெறுவதற்கு உதவும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் வேல்மாறல் மந்திரமாகும். எந்த ஒரு வேண்டுதலை வைத்து இந்த பதிகத்தை காலை, மாலை இருவேளையுமோ அல்லது ஒரு நாளைக்கு ஒருமுறையோ தொடர்ந்து கூறி வந்தால் கை மேல் பலன் கிடைக்கும். இந்த மந்திரத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். எந்த குறை தீர வேண்டும் என்றாலும் இந்த மந்திரத்தை சொல்லலாம். குறிப்பாக வினைகளை தீர செய்து, நன்மைகளை தரக் கூடிய மந்திரம் இது.

✨✨✨✨✨✨✨✨✨

வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளால் இயற்றப்பட்ட வேல்மாறல் மகா மந்திரத்தை தொடர்ந்து ஒரு மண்டலம் சொல்லி வர வேண்டும். 48 நாட்கள் வீட்டில் முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து இந்த இதை படிப்பது சிறப்பானது. மன பயம் நீங்கி, மன நிம்மதி, மனமகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். முருகனுக்குரிய முக்கிய விரத நாட்களில் இந்த மந்திரத்தை சொல்வது பல மடங்கு அதிகமான பலனை தரும். இதை முறையாக சொல்லி வருபவர்களுக்கு அளவில்லாத பலன்கள் கிடைக்கும். 

✨✨✨✨✨✨✨✨

நோய் தீர வேண்டும், பிரச்சனைகள் தீர வேண்டும் என நினைப்பவர்கள் இந்த மந்திரத்தை படிக்கலாம்.

✨✨✨✨✨✨✨✨


✨✨✨✨✨✨✨✨

விநாயகர்  வணக்கம் 

✨✨✨✨✨✨✨✨

நெஞ்சம் கனகல்லு நெகிழ்ந்து உருகத்  தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்  செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம்பணிவாம். 

முருகன் பெருமை 

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றாமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்தபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனிவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே. (வேலும் மயிலும் சேவலும்துணை என ஆறு முறை ஓதவும்).

✨✨✨✨✨✨✨✨✨

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய   'வேல் மாறல்'

வேலும் மயிலும் துணை ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை

விருத்தன்என(து) உளத்தில்உறை

கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

( ... இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் ... )

( ... பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் "திரு" என்ற

இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் ... )

  1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை

 கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி

விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

  2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை

 விருத்தன்என(து) உளத்தில்உறை

 கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

  3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை

அடுத்தபகை அறுத்(து)எறிய

 உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

  4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி

 தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை

கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

  5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள

 கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி

 களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

  6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு

 குறைத்தலைகள் சிரித்(து)எயிறு

 கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

  7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்

 நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்

 எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

  8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண

வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை

விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

  9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு

 கவிப்புலவன் இசைக்(கு)உருகி

 வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை

        முளைத்த(து)என.  

         முகட்டின்இடை

         பறக்கஅற.    விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி

         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்

         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு

         வலத்தும்இரு     

        புறத்தும்அரு(கு)

         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்

         ஒழித்(து)அவுணர் 

         உரத்(து)உதிர

         நிணத்தசைகள் 

         புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது

        குடித்(து)உடையும் 

        உடைப்(பு) அடைய

         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

15. சுரர்க்கு(ம்)

முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி

 தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்

         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்

         பெருத்தகுடர் சிவத்ததொடை

         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி

         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்

         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்

         பெருத்தகுடர் சிவத்ததொடை

         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்

         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர

         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது

         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய

         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி

         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்

         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு

         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)

         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு

         கவிப்புலவன் இசைக்(கு)உருகி

         வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை

         முளைத்த(து)என முகட்டின்இடை

         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்

         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்

         எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண

         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை

         விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள

         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி

         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு

         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு

         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை

         அடுத்தபகை அறுத்(து)எறிய

         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி

         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை

         கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை

        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி

        விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை

        விருத்தன்என(து) உளத்தில்உறை

        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி

         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை

         கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை

         அடுத்தபகை அறுத்(து)எறிய

         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை

        விருத்தன்என(து) உளத்தில்உறை

        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை

        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி

        விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண

         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை

         விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்

         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்

         எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு

         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு

         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள

         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி

         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு

         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)

         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி

         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்

         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை

         முளைத்த(து)என முகட்டின்இடை

         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு

         கவிப்புலவன் இசைக்(கு)உருகி

         வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்

         பெருத்தகுடர் சிவத்ததொடை

         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி

         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்

         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது

         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய

         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்

         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர

         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது

         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய

         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்

         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர

         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்

         பெருத்தகுடர் சிவத்ததொடை

         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி

         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்

         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை

         முளைத்த(து)என முகட்டின்இடை

         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு

         கவிப்புலவன் இசைக்(கு)உருகி

         வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு

         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)

         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி

         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்

         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு

         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு

         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள

         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி

         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண

         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை

         விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்

         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்

         எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை

        விருத்தன்என(து) உளத்தில்உறை

        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை

        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி

        விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி

         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை

         கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை

         அடுத்தபகை அறுத்(து)எறிய

         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

65. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை

        விருத்தன்என(து)     

         உளத்தில்உறை

        கருத்தன்மயில்     

        நடத்துகுகன்           

        வேலே ( ... திரு ... )


( ... முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் ... )

 தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்

 கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்

 நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்

 பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.

 வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட

 தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி

 குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்

 தொளைத்தவேல் உண்டே துணை.

வேலும் மயிலும் துணை 

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்