இதய கோவில் இசை: இளையராஜா

படம்: இதய கோவில் இசை: இளையராஜா வரிகள்: பாவலர் வரதராஜன் பாடியவர்: S. P. B ✨✨✨✨✨✨ வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் வானுயர்ந்த சோலையிலே வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன் பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன் பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும் தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும் வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் வானுயர்ந்த சோலையிலே ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் வானுயர்ந்த சோலையிலே. ✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்