நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம் பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்

 ✨✨✨✨✨✨✨✨

படம்: புதுப்பாட்டு

பாடியவர்கள்:

இளையராஜா &K.S.சித்ரா

ஆண்டு:1990

இசை:இளையராஜா

வரிகள்:பஞ்சு அருணாச்சலம்

✨✨✨✨✨✨✨✨

நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்

பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்

காத்து குளிர் காத்து

கூத்து என்ன கூத்து

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது

பாட்டுத்தான் புது பாட்டுத்தான்

தனக்குத்தக்க கூட்டுதான்

இணைஞ்சதொரு கூட்டுதான்

ஆத்தங்கரையோரம் பூத்திருக்கும் அழகுப் பூவாசம்

பாத்து மனசோரம் பசிச்சிருக்கும் பலநாள் உன் நேசம்

அடி ஆத்தி ஆத்திமரம் அரும்பு விட்டு ஆரம் பூத்த மரம்

மாசி மாத்தி தரும் மனசு வெச்சு மாலை போட வரும்

பூத்தது பூத்தது பார்வை போர்த்துது போர்த்துது போர்வை

பாத்தது தோளில தாவ கோர்த்தது கோர்த்தது பூவ

போட்டா கணை போட்டா 

கேட்டா பதில் கேட்டா 

வழி காட்டுது...பலசுகம் கூட்டுது...வருகிற… 

பாட்டுத்தான்…ஹே ஹே ஹே...புதுப்பாட்டுத்தான் தனக்குத்தக்க...கூட்டுத்தான்... ஹே ஹே ஹே... 

இணைஞ்சதொரு...

கூட்டுத்தான் (நேத்து ஒருத்தர...)

அழகா சுதி கேட்டு நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு 

படிப்பேன் பல பாட்டு தினம் நடக்கும் காதல் விளையாட்டு 

இந்த மானே மரகதமே ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே 

பாடும் ஒரு வரமே எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே 

பாட்டொரு பாத்தொரு மாதிரி ஆச்சு ராத்திரி தூக்கமும் போச்சு 

காத்துல கரையுது மூச்சு காவிய மாகிடலாச்சு 

பாத்து வழி பாத்து 

சேத்து ஒன்ன சேத்து 

அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது 

பாட்டுத்தான்…ஹே ஹே ஹே...புதுப்பாட்டுத்தான் 

தனக்குத்தக்க...கூட்டுத்தான்... ஹே ஹே ஹே... 

இணைஞ்சதொரு...

கூட்டுத்தான் (நேத்து ஒருத்தர...)

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்