சாய் பாபா கவசம்

 ✨✨✨✨✨✨✨

சாய் பாபா கவசம்

✨✨✨✨✨✨✨

புஷ்பங்களாலே பூஜிக்க வந்தோம் 

புண்ணிய உருவே சீரடி பாபா

கஷ்டம் கவலை கண்ணீர் போக்கும் கலியுக தெய்வம் நீயே பாபா(2)

அஷ்டதிக்கிலும் உன்புகழ் ஒலிக்கும் அணியணியாக உன்னடி பணியும்

துஷ்டரை ஓட்டும் தூயவன் நீயே தொழுதிட வந்தோம் உன்திருவடியே

சித்துக்கள் பற்பல செய்பவன் நீயே சிந்தையில் கலந்து உரைபவன் நீயே

பித்தனைப் போலே திரிந்தவன் நீயே பேருலகாளும் இறைவன் நீயே

முத்துகளாக மணிமொழிப் பகன்றாய் முழுமனதோடு ஏற்றிட அருள் தா

சத்திய வடிவாய் வாழ்ந்தவன் நீயே சாந்தஸ்வரூபி எங்களின் பாபா

✨✨✨✨✨✨✨

கருணை வடிவே காக்கும் திருவே கணிந்தருள் செய்யும் சீரடி பாபா

வரும் வினை தீர்க்க வந்தவன் நீயே வறுமையில் வாழ்ந்த வள்ளலும் நீயே(2)

பொறுமையில் பூத்த புண்ணியன் நீயே பொன்னும் மணியும் நீ தருவாயே

கருவினை காக்கும் கடவுளும் நீயே கைதொழுவோமே உன்திருவடியே

பிறவியின் பலனை தருபவன் நீயே பெருமைகள் நிறைந்த பெரியவன் நீயே

அறம்பல போற்றும் ஆண்டவன் நீயே அதிசயம் நிகழ்த்தும் அற்புதன் நீயே

தருமத்தை காக்கும் தலைவனும் நீயே தன்னிகரில்லா புனிதனும் நீயே

சுரந்திடும் இரக்கம் உன்னிடம் தானே சுந்தரவடிவே உனைப் பணிவோமே

✨✨✨✨✨✨✨✨

பேரும் புகழும் பெருமைகள் யாவும் பெருகிடச் செய்யும் குருவும் நீயே

சன்னதி வந்து வணங்கி நின்றாலே சங்கடம் போக்கும் சத்குரு நீயே(2)

போராடும் வாழ்க்கை பூவனமாக 

புரிவாய் அருள்நீ சீரடி பாபா

நல்வழி காட்டும் நாயகன் நீயே நவநிதியாக வந்தவன் நீயே

எளிமையின் வடிவாய் இருப்பவன் நீயே எளியவர் அன்பை ஏற்பவன் நீயே

வளமிகு வாழ்வை தருபவன் நீயே வணங்கிடுவோமே சீரடி பாபா

சிறுவிழிப் பார்வை சிரமங்கள் போக்கும் செவ்விதழ் சிரிப்பு மர்மங்களாகும்

கரங்கள் இரண்டும் அன்பரை அணைக்கும் காலடி இரண்டும் உயிர் நிழல் கொடுக்கும்

அறிவின் ஒளியே ஆற்றலின் நிறைவே

அடியவர் வியக்கும் அற்புதத் திருவே

வறுமையை ஓட்டும் 

வழி வழி நிதியே வருவோம் சீரடி தலமே பாபா

வருவது வரட்டும் துயரங்கள் தரட்டும் உனதருள் இருந்தால் நலமே விளையும்

மறைவது தெரியும் தெரிவது மறையும் மந்திரம் செய்யும் மாயவன் நீயே

✨✨✨✨✨✨✨✨✨

முன்வினையாவும் போக்கிட வந்த மூர்த்தியும் நீயே மூலவன் நீயே

வாராய் வாராய் பூமிக்கு விரைந்து 

தாராய் தாராய் அருளினை மகிழ்ந்து(2)

சந்திரன் சூரியன் அனைத்தும் நீயே தந்தருள்வாயே வானில் ஒளியே

மந்திரம் யாவிலும் மறைந்திருப்பவனே மண்ணுலகாளும் சீரடி பாபா

இடர்பல விலக்கும் இளகிய மனத்தோன் தடைகளை தகர்க்கும் தந்திர குணத்தோன்

விடைப்பல தேடும் வீணருக்கெல்லாம் விளங்கிட முடியா தத்துவம் நீயே

பேசிட உன்புகழ் தேனாய் இனிக்கும் பேரருளாளன் என்பதை உரைக்கும்

நேசனே எங்களை நேசிப்பவனே நின்தாழ் சரணம் சீரடி பாபா

✨✨✨✨✨✨✨✨✨

எண்ணம் முழுதும் இருப்பவன் நீயே  எண்ணிய யாவும் நடத்தி வைப்பாயே

கேட்கும் வரங்கள் நீ தருவாயே 

கீர்த்திகள் நிறைந்த சீரடி பாபா(2)

அடியார் நெஞ்சை அறிந்தவன் நீயே அளவிட முடியா அருளின் கடலே

குழந்தையின் உள்ளம் கொண்டவன் நீயே குவளையம் காக்கும் சீரடி பாபா

குற்றம் குறைகள் பொருத்தருள்வாயே குளிர்மனத்தோடு அருளிடுவாயே

தேனாய் இனிக்கும் திருவினை உடையாய் தீவினை அகற்றும் திறமுடையோனே

தொட்டது எல்லாம் துலங்கிட அருளும் தூயவன் நீயே சீரடி பாபா

அனைத்தும் நீயே ஆனாய் இங்கே 

அபயம் தந்து காத்திடும் பாபா

✨✨✨✨✨✨✨✨✨

வையகம் போற்றிட வந்தவன் நீயே வணங்கிட வந்தோம் உன்திருவடியே

செய்வது எல்லாம் சிறப்புடன் அமைய செய்திட வேண்டும் சீரடி பாபா

தாயவள் போலே துணையாய் இருந்து தாங்கிட வேண்டும் உன்திருக்கரமே

தப்பாய் நாங்கள் நடந்திடும் வேளை தடுத்தாட்கொள்ளல் உந்தன் கடனே

அடியார் மனதில் அமர்ந்திருப்பவனே அருளின் ஆற்றல் நிறைந்திருப்பவனே

வரும் பகை அகற்றும் வல்லமையோனே வளமுடன் வாழ செய்திடுவோனே

கோபத்தை விரட்டும் கொற்றவன் நீயே கோடையில் நிழலாய் வருபவன் நீயே

ஆக்கம் ஊக்கம் அளிப்பவன் நீயே தீர்க்கதரிசியே சீரடி பாபா

✨✨✨✨✨✨✨✨✨

வாழ்க்கை முழுதும் வரும் துணை நீயே வாழ்வில் செல்வம் தருவதும் நீயே

எண்ணில் அடங்கா செய்வினை விலக என்றும் துணையாய் இருப்பவன் நீயே

சொல்லில் அடங்கா புகழுடையோனே சொன்னால் இனிக்கும் சுவையுடையோனே

நல்லவர்க்கருளும் நாயகன் நீயே 

நம்பிய பேர்களின் காவலன் நீயே

தினமுனை பணிந்தால் மனமது தெளியும் தீவினையனைத்தும் நொடியினில் விலகும்

உள்ளம் முழுதும் உன்வசமானால் ஒவ்வொரு நாளும் நலமே விளையும்

மொட்டாய் பூவாய் முகமது மலரும் உன்னெதிர் வந்தால் உள்ளம் மகிழும்

உன்பெயர் சொன்னால் ஊழ்வினையகலும்

✨✨✨✨✨✨✨✨✨

காணும் இடங்கள் யாவிலும் இருந்து

காக்கும் எங்கள் சீரடி பாபா

அகமும் புறமும் மகிழ்வே வேண்டும்

ஆனந்த வாழ்வு  வழங்கிட வேண்டும்

இணையில்லாத ஈசனும் நீயே 

எங்களைக் காக்கும் திருமால் நீயே

வீசிடும் காற்றும் விரிந்திடும் வானும் 

பேசிடும் உந்தன் பெருமையை தானே

முடிவில்லாத அருளின் கதையே 

மோனத்தவத்தில் மூழ்கிய அறிவே

தாமதமாக உனைப் பணிந்தாலும் 

ஆதரித்தருளும் அன்னையும் நீயே 

நோய் பல விரட்டும் மாமருந்தாக 

பூமியில் உலவும் புண்ணியன் நீயே

போடி பொடியாக துயர் துடைப்பாயே

பூவிதழ் போலே மனம் படைத்தாயே

பட்டு பட்டு உன் விழி பட்டு

பட்ட மரங்களும் பூத்துக் குலுங்கும் 

எட்டு எட்டு திசைகள் எங்கிலும் 

எங்கும் உன் புகழ் நின்று முழங்கிடும் 

✨✨✨✨✨✨✨✨✨

வெற்றி வெற்றி தினம் பல வெற்றி

உன்னால் வந்து வாசலில் சேரும்

பற்று பற்றென பற்றிடுவோமே

பாத கமலத்தை பக்தியினாலே

சடுதியில் வந்து எங்களை காக்க

சத்குரு பாபா இதுவே தருணம் 

கொடுமைகள் விலக

குறைகளும் அகல

சீரடி பாபா

உனதடி சரணம்

மாறிடும் உலகில் மாறாதிருக்கும் 

பலமுடையோனே மானுட இறைவா 

கோரிக்கை வைத்தோம்

நிறைவேற்றிடுவாய்

குவளையம் போற்றிட

அருளிடும் பாபா

அடைக்கலம் என்று வந்தவர்க்கெல்லாம் 

அபயம் நல்கும் ஆன்மீக குருவே

படைக்கலம் இல்லா வீரனைப் போலே 

பகவானே வந்தாய் இங்கே

✨✨✨✨✨✨✨✨✨

✨✨✨✨✨✨✨✨✨

நல்லோன் என்று வையகம் பேசும் 

வருகின்ற போதே உதியின் வாசம் 

ஊரோ பேரோ யாமறியோமே

ஊழ்வினை அகல 

உனைப்பணிவோமே

உன்னால் இதுவே உன் புகழ் பாடும் 

புனிதன் உனையே என் மனம் நாடும் 

கண்ணாய் இமையாய் எங்களைக் காப்பாய்

காலம் முழுதும் 

சீரடி பாபா

முழுமதி ஒளியே முரசுகள் ஒலியே 

அருள்வழி காட்டும்

ஆன்மீக நதியே

உழுதிடும் மனதில்

விளைந்திடும் வழியே

ஒரு கணம் கூட உனை நான் மறவேன்

ஆற்றலின் வடிவாய் பார்த்திடுவோமே

பரம்பொருள் நீ என அறிந்திடுவோமே

சாத்திரம் அறிந்த சாதுவும் நீயே

சாந்தமே வடிவாய் ஆனவன் நீயே

✨✨✨✨✨✨✨✨✨

✨✨✨✨✨✨✨✨✨

சிரமே பணிவோம் சீரடி பாபா

செய்வாய் கருணை

நீயே பாபா

கரம்குவித்தோமே உனையே பாபா

கர்வத்தின் நிலையை களைவாய் பாபா

நேராய் வந்து நிற்பவன் நீயே

நினைவாய் நெஞ்சில்

இருப்பவன் நீயே

வாராய் என்று உனை அழைப்போமே

வாசலை நாங்கள்

திறந்து வைப்போமே

தேடினேன் தேடினேன்

திசைப் பலயாவும்

நாடினேன் நாடினேன்

நின் திருவடிகள்

பாடினேன் பாபா

நிந்தன் புகழை

எம்மதத்தோரும் வணங்கிடும் பாபா

எளியவர் வாழ்வை உயர்த்திடும் பாபா

நிம்மதி வாழ்வில் வழங்கிடும் பாபா

நிர்மலன் நீயே பாபா வாழ்க

வாழ்க வாழ்க நின் புகழ் 

வாழ்க

வாழ்க வாழ்க சீரடி 

வாழ்க

வாழ்க வாழ்க பகவான் 

வாழ்க

வாழ்க வாழ்க பாபா 

வாழ்க

வாழ்க வாழ்க சாயி 

வாழ்க

✨✨✨✨✨✨✨✨✨

வாழ்க வாழ்க குருவே 

வாழ்க

அறியாப் பிழைகள் ஆயிரம் செய்தோம்

அனைத்தும் பொறுத்து எங்களை காப்பாய்

ஆதியும் அந்தமும் இல்லா பாபா

உச்சந்தலை முதல் ஒவ்வொரு உறுப்பையும் உன்னதமாக காத்திடல் வேண்டும் 

நிச்சயமாக நின் புகழ்

உண்டு

எங்களை காக்கும் கவசம் ஆகும்

அன்புடன் எவருனை அடி பணிந்தாலும்

அவர்களுக்கருளும் உத்தமன் நீயே

மண்பதை சுழலும்

நாளது வரையில்

நிகழும்  உந்தன் மகிமைகள் தானே

மானுட வாழ்வில் துன்பங்கள் மறைய

மனதில் நாளும் ஆனந்தம் நிறைய தேனாய் தமிழில் உன் புகழ் பாட 

காற்றாய் மறையும் கடும் துயர் தானே 

✨✨✨✨✨✨✨✨✨

✨✨✨✨✨✨✨✨✨

ஆதி ஒளியே ஆனந்தச் சுடரே  

அன்பரைக் காத்திட அவதரித்தாயே 

ஜோதி லிங்கன் திருவடி சரணம்

சோதனையாவிலும் வெற்றிகள் தரணும்

ஒன்பது கோளும் உன் அடிபணியும்

உந்தனின் 

ஆணைப் படியே சுழலும் 

நன்மைகள் யாவும் உன்னால் விளையும்

நாளும் பொழுதும் நலமாய் அமையும்

விழியால் காண வேதனை அகலும்

வேற்றுமை எல்லாம் ஒற்றுமை காணும்

அழியாப் புகழை அடைந்தவன் நீயே அனைவரும்

வணங்கும் திருவுடையோனே கர்வம் ஆணவம் களைந்திட வேண்டும்

காலையும் மாலையும் உனைத் தொழ வேண்டும் 

 சர்வமும் நீ என உணர்ந்திட வேண்டும் சகல செல்வங்கள்

பெருகிட வேண்டும்

கரும்பாய் இனிக்கும் கருணா மூர்த்தி

கணிவாய் எமக்கு தருவாய் கீர்த்தி 

அனுதினம் உனக்கு எடுப்போம் ஆரத்தி

ஐயா பாபா உனதடி போற்றி

✨✨✨✨✨✨✨✨

பூமியில் தோன்றிய புனிதா போற்றி

பூவினும் மெல்லிய மனதாய் போற்றி

தேவைகள் எல்லாம் தெரிந்தாய் போற்றி

திருவடி நிழலை தருவாய் போற்றி

உடும்பாய் உன்னை பிடித்தோம் போற்றி 

உலகோர் உய்ய வருவாய் போற்றி 

வியாழனில் விரதம் இருந்தோம் போற்றி 

வென்றிடும் அருளைத் தருவாய் போற்றி

சீரடி வாழும் நாதா சரணம்

சேவடி பணிந்தோம் பாபா சரணம்

சரணம் சரணம் சாயி சரணம் 

சரணம் சரணம் குருவே சரணம் 

✨✨✨✨✨✨✨✨✨


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்