NEE KAATRU NAAN MARAM

படம் : நிலாவே வா பாடல் : நீ காற்று, நான் மரம், இசை : வித்யாஷாகர் பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : சித்ரா, ஹரிஹரன் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ மழை, நான் பூமி, எங்கு விழுந்தாலும் ஏந்தி கொள்வேன் நீ இரவு, நான் விண்மீன், நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன் நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் — நீ அலை, நான் கரை என்னை அடித்தாலும் ஏற்று கொள்வேன் நீ உடல், நான் நிழல் நீ விழ வேண்டாம், நான் விழுவேன் நீ கிளை, நான் இலை, உன்னை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தரிப்பேன் நீ விழி, நான் இமை உன்னை சேரும் வரைக்கும் நான் துடித்திருப்பேன் நீ சுவாசம், நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன் — நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் — நீ வானம், நான் நீலம், உன்னில் நானாய் கலந்திருப்பேன் நீ எண்ணம், நான் வார்த்தை, நீ சொல்லும்பொழுதே வெளிபடுவேன் நீ வெயில், நான் குயில், உன் வருகை பார்த்துதான் நான் இசைப்பேன் நீ உடை, நான் இடை உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன் நீ பகல், நான் ஒளி, என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன் — நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ மழை, நான் பூமி, எங்கு விழுந்தாலும் ஏந்தி கொள்வேன் நீ இரவு, நான் விண்மீன், நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன் நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்