ஶ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம்

 ✨✨✨✨✨✨✨✨✨

ஶ்ரீ  மீனாட்சி பஞ்சரத்னம்

✨✨✨✨✨✨✨✨✨

ஸ்ரீ  மீனாட்சி அம்பாளின் புகழ் பாடும் ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம் கீழே கொடுத்துள்ளோம்.

 யாவரும் ஒருமுறையேனும் படித்து பின்பு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் தரிசனம் செல்ல முற்படுங்கள். அம்பாளின் அருள் அலைகள் உணரும் வாய்ப்பு விரைவில் கிட்டும்.

✨✨✨✨✨✨✨✨✨

உத்யத்பானு சஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூர ஹாரோஜ்ஜவலாம்

பிம்போஷ்டீம் ஸ்மிததங்க்த பங்க்தி ருசிராம் பீதாம்பராலங்க்ருதாம்

விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் தத்வ ஸ்வரூபாம் சிவாம்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்.

ஆயிரம் கோடி உதயசூரியனின் ஒளிக்கு ஈடான ஒளியை உடையவளும்; வளையல்கள், மாலைகள் போன்ற அணிகளால் ஒளிவீசுபவளும்; கோவைப்பழங்கள் போன்ற இதழ்களை உடையவளும் புன்னகை புரியும் பல்வரிசைகள் உடையவளும்; பொன் பட்டாடைகளால் அழகு பெற்றவளும் திருமால், பிரம்மன், தேவர் தலைவன் போன்றவர்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும் உண்மைப் பொருளானவளும் மங்கள வடிவானவளும் கருணைக்கடல் ஆனவளும் பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

✨✨✨✨✨✨✨✨✨

முக்தாஹார லஸத் கிரீடருசிராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்

சிஞ்சந் நூபுர கிண்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம்

ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமா ஸேவிதாம்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

✨✨✨✨✨✨✨✨✨

 முத்துமாலைகளால் சூழப்பட்ட ஒளிவீசும் மௌலியை (மகுடத்தை) உடையவளும், ஒளி வீசும் முழுமதியைப் போன்ற திருமுகத்தை உடையவளும், கிண் கிண் என்று ஒலி செய்யும் மாணிக்க சிலம்புகளை அணிந்தவளும், தாமரை போல் அழகு பொருந்தியவளும், அடியவர்களின் ஆசைகள் அனைத்தையும் அருளுபவளும், மலைமகளும், கலைமகளாலும் அலைமகளாலும் வணங்கப்பட்டவளும்;

கருணைக்கடல் ஆனவளும், பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

✨✨✨✨✨✨✨✨✨

ஸ்ரீவித்யாம் சிவவாமபாகநிலயாம் ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம்

ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதீம் ஸ்ரீமத் சபாநாயகீம்

ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

✨✨✨✨✨✨✨✨✨மறைகல்வி வடிவானவளும், சிவபெருமானின் இடப்பாகத்தில் வசிப்பவளும், ஹ்ரீம் என்ற வித்தெழுத்து மந்திரத்தில் (பீஜாக்ஷர மந்திரம்) ஒளி வீசி இருப்பவளும், ஸ்ரீசக்ரத்தின் நடுவட்டத்தில் வசிப்பவளும், சுந்தரேசுவரனின் சபைக்குத் தலைவியும், ஆறுமுகனான முருகனையும் தடைகளை நீக்கும் விநாயகனையும் பெற்றவளும்; உலகங்களை மயக்குபவளும், கருணைக்கடல் ஆனவளும், பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

✨✨✨✨✨✨✨✨✨

ஸ்ரீமத் சுந்தரநாயிகாம் பயஹராம் ஞானப்ரதாம் நிர்மலாம்

ச்யாமாபாம் கமலாசனார்ச்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம்

வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரசிகாம் நானாவிதாமம்பிகாம்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்.

✨✨✨✨✨✨✨✨✨

 சுந்தரேசருடைய நாயகியும், அடியவர்களுடைய பயத்தை நீக்குபவளும், அடியவர்களுக்கு பேரறிவை (ஞானத்தை) நல்குபவளும், குறையொன்றும் இல்லாதவளும், கருநீல நிறம் கொண்டவளும், தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மனால் அருச்சிக்கப்பட்ட திருவடிகளை உடையவளும், நாராயணனுடைய தங்கையும், யாழ், குழல், மிருதங்கம் முதலியவற்றின் இசையை இரசிப்பவளும், பல்விதமான உயிர்களுக்கு அன்னையும, கருணைக்கடல் ஆனவளும, பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

✨✨✨✨✨✨✨✨✨

நானா யோகி முனீந்த்ர ஹ்ருந் நிவஸதீம் நானார்த்த சித்திப்ரதாம்

நானா புஷ்ப விராஜிதாங்க்ரியுகளாம் நாராயணேநார்ச்சிதாம்

நாதப்ரஹ்மமயீம் பராத்பரதராம் நானார்த்த தத்வாத்மிகாம்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

சிறந்த யோகிகள், முனிவர்கள் போன்றவர்களின் இதயத்தில் என்றும் வசிப்பவளும், வேண்டும் அனைத்துப் பொருட்களையும் தருபவளும், எல்லாவிதமான பூக்களாலும் அழகு பெற்ற திருவடிகளை உடையவளும், நாராயணனாலும் அருச்சிக்கப்பட்டவளும், நாதபிரம்ம உருவானவளும், உயர்ந்ததிலும் உயர்வானவளும், அனைத்துப் பொருட்களிலும் உள்நின்று இயக்குபவளும், கருணைக்கடல் ஆனவளும், பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்