ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:நினைவெல்லாம் நித்யா

ஆண்டு:1982

இசை:இளையராஜா

பாடியவர்கள்:

 S.P.B & S.ஜானகி

வரிகள்:வைரமுத்து

✨✨✨✨✨✨✨✨✨

பெண்: ரோஜாவை தாலாட்டும் தென்றல்

பொன்மேகம் நம் பந்தல்

ஆண்: உன் கூந்தல் என்னூஞ்சல்

உன் வார்த்தை சங்கீதங்கள்

ரோஜாவை தாலாட்டும் தென்றல்

பொன்மேகம் நம் பந்தல்

ஆண்: இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை

விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை

(இலைகளில்...)

பெண்: மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு

(மௌனமே...)

பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு..ஹூ

ஆண்: ரோஜாவை தாலாட்டும் தென்றல்

பெண்: பொன்மேகம் நம் பந்தல்

ஆண்: உன் கூந்தல் என் ஊஞ்சல்

பெண்: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்

இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்

(வசந்தங்கள்..)

ஆண்: பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்

(பூவிலே...)

நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ

பெண்: ரோஜாவை தாலாட்டும் தென்றல்

பொன்மேகம் நம் பந்தல்

 ✨

ஆண்: உன் கூந்தல் என் ஊஞ்சல்

பெண்: உன் வார்த்தை சங்கீதங்கள்

 ரோஜாவை தாலாட்டும் தென்றல்

கோரஸ்: பொன்மேகம் நம் பந்தல்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்