சிங்கப்பெண்ணே

 ✨✨✨✨✨✨

படம்: பிகில்

ஆண்டு:2020

இசை:ஏ. ஆர். ரகுமான் 

பாடியவர்கள் ஏ.ஆர் ரகுமான் ,ஷாஷா திருப்பாத்தி 

வரிகள்:விவேக் 

✨✨✨✨✨✨✨

ஆண் : மாதரே… ஏஏ… மாதரே… ஏஏஏ…

ஆண் : வாளாகும் கீறல்கள் துணிவோடு…

பாகங்கள் திமிரோடு…

சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்…

ஆண் : பூமியின் கோலங்கள் இது உங்கள் காலம்…

இனிமேல் உலகம் பார்க்க போவது…

மனிதியின் வீரங்கள்…

ஆண் : சிங்கப் பெண்ணே… சிங்கப் பெண்ணே…

ஆணினமே உன்னை வணங்குமே…

நன்றிக் கடன் தீர்ப்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே…

ஆண் : ஒருமுறை தலைகுனி…

உன் வெற்றிச் சிங்கம் முகம்…

அவன் பார்ப்பதற்கு மட்டுமே…

ஆண் : ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…

உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…

உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

ஆண் : ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…

உன்னை பெண்ணென்று…

கேலி செய்த கூட்டம் ஒருநாள்…

உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

பெண் : சிங்கப்பெண்ணே….

ஆண் : ஆமாம்…

பெண் : சிங்கப்பெண்ணே…

ஆண் : சிங்கப்பெண்ணே…

பெண் : ஆணினமே உன்னை வணங்குமே…

ஆண் : நன்றிக் கடன் தீர்ப்பதற்கே…

கருவிலே உன்னை ஏந்துமே…

ஆண் : ஏறு ஏறு ஏறு…

குழு (பெண்கள்) : ஏறு…

ஆண் : நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…

குழு (பெண்கள்) : ஏறு…

ஆண் : உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள்…

உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

ஆண் : அன்னை தங்கை மனைவி என்று…

நீ வடித்த வியர்வை உந்தன்…

பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும்…

நீ பயமின்றி துணிந்து செல்லு…

ஆண் : உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே…

பொய்யாக காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே…

ஆண் : ஏ… உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லு நம்பாதே…

பொய்… பொய்யாக காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே…

ஆண் : உலகத்தின் வலியெல்லாம் வந்தால் என்ன உன் முன்னே…

பிரசவத்தின் வலியைத் தாண்ட பிறந்த அக்கினிச் சிறகே… ஏஏஏ…

எழுந்து வா… ஆஆ…

ஆண் : உலகை அசைப்போம் உயர்ந்து வா…

அக்கினிச் சிறகே…

குழு (ஆண்கள்) : அக்கினிச் சிறகே… ஏ… ஏ…

ஆண் : எழுந்து வா… ஆஆஆ…

உன் ஒளி விடும் கனாவை சேர்ப்போம் வா…

அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா…

ஆண் : ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…

உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…

உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

ஆண் : ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…

உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…

உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

பெண் : நன நன நன… நன்னா னான…

நன நன நன நன நன நன்னா னான…

பெண் : இதோ காயங்கள் மாறும் கலங்காதே…

உன் துன்பம் வீழ்ந்தாரும்…

பெண் : உனக்காக நீயே உதிப்பாய் அம்மா…

உனதாற்றல் உணர்த்திடுவாய்…

விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்…

விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்…

பெண் : சிங்கப் பெண்ணே… ஏ…

சிங்கப் பெண்ணே… ஏஏ…

ஆணினமே உன்னை வணங்குமே…

ஆண் : ஆணினமே உன்னை வணங்குமே…

நன்றி கடன் தீர்ப்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே… ஏ… ஏ…

ஆண் : ஒருமுறை… தலைகுனி…

உன் வெற்றி சிங்கம் முகம்…

அவன் பார்ப்பதற்கு மட்டுமே…

ஆண் & பெண் : ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…

ஆண் : உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…

உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

ஆண் : பாரு பாரு…

ஆண் : அன்னை தங்கை மனைவி என்று…

நீ வடித்த வியர்வை உந்தன்…

பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும்…

ஆண் : நீ பயமின்றி… நீ பயமின்றி…

நீ பயமின்றி துணிந்து செல்லு

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்