காலபைரவ அஷ்டகம் பொருளுடன்
சிவாய நம: ||
காலபைரவ அஷ்டகம்
✨✨✨✨✨✨✨✨✨
தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்வ்யாலயஜ்ஞ ஸூத்ரமிந்து ஶேகரம் க்ருபாகரம் நாரதாதி யோகிவ்ருந்த வந்திதம் திகம்பரம்காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே॥ 1॥
✨
பானுகோடி பாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்நீலகண்டம் ஈப்ஸிதார்த தாயகம் த்ரிலோசனம் ।காலகாலம் அம்புஜாக்ஷம் அக்ஷஶூலம் அக்ஷரம்காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே॥2॥
✨
ஶூலடங்க பாஶதண்ட பாணிமாதி காரணம்ஶ்யாமகாயம் ஆதிதேவம் அக்ஷரம் நிராமயம் ।பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே ॥3॥
✨
புக்திமுக்திதாயகம் ப்ரஶஸ்தசாருவிக்ரஹம்பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் ।வினிக்வணன் மனோஜ்ஞஹேமகிங்கிணீ லஸத்கடிம்காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே ॥4॥
✨
தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கநாஶகம்கர்மபாஶ மோசகம் ஸுஶர்மதாயகம் விபும் ।ஸ்வர்ணவர்ணஶேஷபாஶ ஶோபிதாங்கமண்டலம்காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே ॥ 5॥
✨
ரத்னபாதுகா ப்ரபாபிராம பாதயுக்மகம்நித்யம் அத்விதீயம் இஷ்டதைவதம் நிரஞ்ஜனம் ।ம்ருத்யுதர்பநாஶனம் கராளதம்ஷ்ட்ரமோக்ஷணம்காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே ॥6॥
✨
அட்டஹாஸ பின்னபத்மஜாண்டகோஶ ஸந்ததிம்த்ருஷ்டிபாதநஷ்டபாப ஜாலமுக்ரஶாஸனம் ।அஷ்டஸித்திதாயகம் கபால மாலிகந்தரம்காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே ॥7॥
✨
பூதஸங்கநாயகம் விஶாலகீர்திதாயகம்காஶிவாஸலோக புண்யபாபஶோதகம் விபும் ।நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்காஶிகா புராதிநாத காலபைரவம் பஜே ॥8॥
✨
காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் ।ஶோக மோஹ தைன்ய லோப கோப தாப நாஶனம்தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம் ॥9॥இதி ஶ்ரீமச்சங்கராசார்யவிரசிதம் காலபைரவாஷ்டகம் ஸம்பூர்ணம் ॥
✨✨✨✨✨✨✨✨✨
பொருள்:
✨✨✨✨✨✨✨✨✨
1.இந்திரனால் வணங்கப்படுகிற மிகத் தூய்மையான தாமரை போன்ற பாதங்களை உடையவரும், சர்ப்பத்தைப் பூணூலாக தரித்திருப்பவரும், சந்திரனைத் தலையில் தரித்திருப்பவரும், தயைச் சுரங்கமும், நாரதர் முதலான யோகிக் கூட்டங்களினால் வணங்கப்படுகின்றவரும், திக்குகளையே ஆடையாக தரித்திருப் பவருமான காசித்தலத்தைக் காக்கும் ஸ்ரீ காலபைரவ மூர்த்தியைப் போற்றுகிறேன்.
✨
2.கோடி சூர்யனின் ஒளியைப் போல பிரகாசிப்பவரும், பிறவிக் கடலைத் தாண்டு விப்பவரும், பரம்பொருளும், கருத்த கழுத்தை உடையவரும், வேண்டுவதை அளிப்பவரும், முக்கண்ணரும், யமனை அடக்குபவரும், தாமரைப்பூ போன்ற கண்களை உடையவரும், ருத்ராக்ஷம், சூலம் இவைகளை ஏந்தியவரும், அழிவற்ற அக்ஷரவடிவரும் காசீ தலத்தைக் காக்கும் காலபைரவ மூர்த்தியைப் போற்றுகிறேன்.
✨
3.சூலம், கோடாரி, பாசக்கயிறு, தண்டம் இவைகளைக் கையில் ஏந்தியவரும் எல்லா உலகத்திற்கும் முதற் காரணமாக உள்ளவரும், கருத்த மேனியரும், முதற் கடவுளும், அக்ஷரரூபியும், பிணியற்றவரும், அஞ்சத்தக்க பராக்கிரமம் கொண்டவரும், ப்ரபுவும், பலவித நடனங்களில் பற்றுக் கொண்டவரும், காசீத் தலத்தைக் காப்பவனும் கால பைரவ மூர்த்தியைப் போற்றுகிறேன்.
✨
4.போகத்தையும், மோக்ஷத்தையும் அளிப்பவரும், போற்றத்தக்கதான அழகான சரீரத்தை உடையவரும், பக்தர்கள் பால் அன்பு கொண்டவரும், என்றைக்கும் அழிவற்றவரும், எல்லா உலகத்தின் சரீரமாக விளங்குபவரும், மனதுக்கு ரம்யமாக சப்திக்கின்ற தங்கமயமான சலங்கை விளங்கும் இடுப்பை உடையவரும், காசித்தலத்தைக் காப்பவனுமான கால பைரவ மூர்த்தியைப் போற்றுகிறேன்.
✨
5.தர்மத்தின் அரணைக் காப்பவரும், அதர்ம மார்க்கத்தை அழிப்பவரும், கர்மாக்களிலிருந்து ஏற்படும் பந்தத்தை விடுவிப்பவரும், மிக்க ஸௌக்யத்தை அளிப்பவரும், தங்கம் போன்ற காந்தி கொண்ட தலை மயிரினால் அழகாக காணும் சரீரத்தை உடையவரும், சுத்தமானவரும், காசித்தலத்தைக் காப்பவனுமாகிய எங்கும் நிறைந்த விபுவான கால பைரவ மூர்த்தியை போற்றுகிறேன்.
✨
6.ரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகைகளின் ஒளியினால் மிக அழகாகப் பிரகாசிக்கும் இரு பாதங்களை உடையவரும், நித்யமானவரும், தமக்கு வேறாக ஏதும் அற்றவரும், விரும்பிப் போற்றத்தக்க தெய்வமானவரும், மாசற்றவரும், யமனின் கொழுப்பை அடக்கியவரும், கோரைப் பற்களை அலங்காரமாக கொண்டவரும், காசித்தலத்தைக் காப்பவனுமாகிய பாலகருமான காலபைரவ மூர்த்தியைப் போற்றுகிறேன்.
✨
7.(பிரளய காலத்தில் தன்னுடைய) கோரமான சிரிப்பினாலேயே பிளக்கப்பட்ட பிரம்மாண்ட வரிசையை உடையவரும், (தன்) பார்வை விழும் மாத்திரத்திலேயே பாபக் கூட்டங்களை தொலைப்பவரும், கடுமையான தண்டனையை விதிப்பவரும், (அணிமா, மஹிமா என்றதான) எட்டு ஸித்திகளை அளிப்பவரும், மண்டை ஓடுகளை மாலையாக தரித்திருப்பவரும், காசித்தலத்தைக் காப்பவனுமாகிய பாலகருமான காலபைரவ மூர்த்தியை போற்றுகிறேன்.
✨
8.பூதக்கணக் கூட்டத்தின் தலைவரும், அகண்டமான புகழை அளிப்பவரும், காசியில் வசிக்கின்ற மக்களின் புண்ணிய பாபங்களை பரிசோதிப்பவரும், எங்கும் நிறைந்து விளங்குபவரும், நீதி வழியை நன்கு அறிந்தவரும், மிகப் பழமையான உலகுக்கு நாயகனும், காசீதலத்தைப் பாதுகாப்பவனுமாகிய கால பைரவ மூர்த்தியைப் போற்றுகிறேன்.
✨✨✨✨✨✨✨✨✨
மிகவும் அழகானதும், ஞான மோக்ஷத்தை அளிப்பதும், பலவித புண்ணியங்களை வளர்க்க வல்லதும், சோகம், மோஹம், லோபம், ஏழ்மை, கோபதாபங்கள் இவைகளைத் தொலைக்க வல்லதுமான கால பைரவரின் இந்த எட்டு ச்லோகம் கொண்ட துதியைப் பாராயணம் செய்பவர்கள். (மேலே கூறிய நற்பயன்களோடு) நிலைத்ததான காலபைரவரின் பாத ஸந்நிதியை அடைவார்கள்.
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக