FILM:RAMU YEAR :1966 MUSIC :M.S.V SINGER:P.B.SRINIVAS

: நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி, தோழி, நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி.... ஆ: நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை, நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை, மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நானில்லை, நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை.... ஆ: கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ, கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ, பாலையில் ஒரு நாள் கொடி வரலாம் என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ.... ஆ: நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை.... ஆ: ஊமையின் கனவை யார் அறிவார் ஊமையின் கனவை யார் அறிவார், என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார் மூடிய மேகம் கலையுமுன்னே நீ பாட வந்தாயோ வெண்ணிலவே.... ஆ: நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை.... ஆ: அமைதி இல்லாத நேரத்திலே அமைதி இல்லாத நேரத்திலே, அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான் நிம்மதி இழந்து நான் அலைந்தேன், இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்..... ஆ: நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை, மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நானில்லை, நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை....

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்