S. P. B நினைவலைகள் படம்: அக்னி சாட்சி இசை: M. S. V (1982)

கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல நிலாக்கால மேகம் எல்லாம் உலாப் போகும் நேரம் கண்ணே உலாப் போகும் நேரம் கண்ணே [குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ ] 2 நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி விளக்கு ஏற்றி வைத்தால் கூட நிழல் போலத் தோன்றும் நிஜமே நிழல் போலத் தோன்றும் நிஜமே " நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன் நிழலையோ பூஜிக்கிறேன் அதனால் தான் உன் நிழல் விழுந்த இடத்தின் மண்ணைக் கூட நெற்றியில் நீரு போல் திருநீரு போல் இட்டுக் கொள்கிறேன் " கனா காணும் கண்கள்..... [புதிய கவிதை புனையும் குயிலே உண்டான காயம் என்ன நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன ] 2 கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம் விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும் வருங்காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே நிகழ்காலம் கூறும் கண்ணே கனாக் காணும் கண்கள் ....

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்