தண்ணிலவு தேனிறைக்க

 ✨✨✨✨✨✨✨✨✨

 படம் : படித்தால் மட்டும் போதுமா

ஆண்டு:1962

பாடகி: P.சுசீலா

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

✨✨✨✨✨✨✨✨✨

தண்ணிலவு தேனிறைக்க


தாழை மரம் நீர் தெளிக்க

கன்னி மகள் நடை பயின்று சென்றாள்


இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்

நாணி நின்றாள்..


தண்ணிலவு தேனிறைக்க

தாழை மரம் நீர் தெளிக்க


கன்னி மகள் நடை பயின்று சென்றாள்

இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்


நெஞ்சமதில் அலை எழும்ப


தஞ்ச மலர் அடி கலங்க

நெஞ்சமதில் அலை எழும்ப


தஞ்ச மலர் அடி கலங்க

அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள் 


அங்கு

அன்பருள்ளம் தனை நினைந்து நின்றாள்

நினைந்து நின்றாள்

தண்ணிலவு தேனிறைக்க

தாழை மரம் நீர் தெளிக்க


கன்னி மகள் நடை பயின்று சென்றாள்

இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்

விண்ணளந்த மனம் இருக்க


மண்ணளந்து அடி எடுக்க

விண்ணளந்த மனம் இருக்க

மண்ணளந்து அடி எடுக்க

பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள் 

ஒரு

பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்


கண்டு நின்றாள்..

தண்ணிலவு தேனிறைக்க

தாழை மரம் நீர் தெளிக்க

கன்னி மகள் நடை பயின்று சென்றாள்


இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்

ஆஹஹ ஹா... ஆஹஹ ஹா...

ஓ... ஓ... ஓ... ஓ...

பொட்டிருக்க பூவிருக்க

பூத்த மலர் மணமிருக்க

பொட்டிருக்க பூவிருக்க

பூத்த மலர் மணமிருக்க


கட்டிலுக்கும் மிக நெருங்கி வந்தாள் 

இரு

கண் விழியில் கவிதை கண்டு நின்றாள்

கண்டு நின்றாள்..(தண்ணிலவு)

தண்ணிலவு தேனிறைக்க

தாழை மரம் நீர் தெளிக்க

கன்னி மகள் நடை பயின்று சென்றாள்

இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்


நாணி நின்றாள்...

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்