என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர

 ✨✨✨✨✨✨✨✨

படம்: ராணித் தேனீ

ஆண்டு:1982

இசை:இளையராஜா

பாடியவர்: P.சுசீலா

வரிகள்:S.N.ரவி

✨✨✨✨✨✨✨✨

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

மேலாடைக்குள் நான் போராடினேன்

நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்

பேதை என்னை வாதை செய்யும்

வெட்கம் விடுமோ ஹோய்


என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

அறியாதவள் நான் தெரியாதவள்

முன் அனுபவம் ஏதும் புரியாதவள்

எத்தனையோ தோணுது மனசினிலே

அது அத்தனையும் எழுதத் தெரியாதவள்

என்ன சொல்லஎப்படி எழுத

ம்ம்ம்ஹூஹூம் மஹாராஜ ராஜஸ்ரீ

காற்றாகப் போனாலும்

அவர் கன்னங்களை நான் தொடுவேன்

காற்றாகப் போனாலும்

அவர் கன்னங்களை நான் தொடுவேன்

பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம்

கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம்

கொல்லாதே கொண்டாலும் சொல்லாலே கொல்லாதே

கண்ணான கண்ணா கண்ணா கண்ணா

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

இதயம் துடிக்குது என் செவிக்கே

கேட்குதம்மா கேட்குதம்மா

வளையல் நடுங்குது வாய் வார்த்தை

குளறுதம்மா குளறுதம்மா

என்ன செய்யஎன்ன செய்யம்ம்

ஹீம்ம்

காத்தாடி போலானேன்

என் கண்ணுக்குள்ளே நோயானேன்

காத்தாடி போலானேன்

என் கண்ணுக்குள்ளே நோயானேன்

பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும்

கல்யாண காலம் வந்தபின்பு மாறும்

நெஞ்சோடு நெஞ்சாக கொஞ்சாமல் போவேனோ

கண்ணான கண்ணா கண்ணா கண்ணா

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

மேலாடைக்குள் நான் போராடினேன்

நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்

பேதை என்னை வாதை செய்யும்

வெட்கம் விடுமோ ஹோய்

என்ன சொல்லி நான் எழுத

என் மன்னவனின் மனம் குளிர

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்