ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: அச்சமில்லை அச்சமில்லை

இசை: வி.எஸ்.நரசிம்மன்

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன்,பி.சுசீலா

✨✨✨✨✨✨✨✨✨

பெ: மேகத்தைத் தூது விட்டா

திசை மாறிப் போகுமோன்னு

தாகமுள்ள மச்சானே..

தண்ணிய நான் தூது விட்டேன்

...

பெ: தண்ணிக்கு இந்தக் கன்னி

தந்தனுப்பும் முத்தமெல்லாம்

எண்ணிக்கை குறையாம எப்ப வந்து தரப் போற

எப்ப வந்து தரப் போற

...

பெ: ஓடுகிற தண்ணியில..

உரசி விட்டேன் சந்தனத்தை..

சேர்ந்துச்சோ.. சேரலையோ..

...

பெ: ஓடுகிற தண்ணியில..

உரசி விட்டேன் சந்தனத்தை..

சேர்ந்துச்சோ.. சேரலையோ..

செவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி

ஓட விட்டேன் தண்ணியிலே

...

பெ: ஓலை ஒண்ணு நான் எழுதி


ஓட விட்டேன் தண்ணியிலே

சேர்ந்துச்சோ.. சேரலையோ..

செவத்த மச்சான் கைகளிலே...

ஆ: அடி கிராமத்துக் கிளியே..

என் கிழியாத தாவணியே

அடி கிராமத்துக் கிளியே..

என் கிழியாத தாவணியே

குளிரெடுக்கும் சாரலுக்கு

கொடை புடிக்க வா மயிலே

குளிரெடுக்கும் சாரலுக்கு

கொடை புடிக்க வா மயிலே

பெ: கொடையுமில்லை.. படையுமில்லை..

கூதலுக்கு ஆதரவா.. தாவணியை நீ

புழிய.. தலை துவட்ட நான் வரவா

ஆ: நீ நனைச்ச ஆடையெல்லாம்

நீ புழிஞ்சா நீர் வடியும்….

நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ

புழிஞ்சா நீர் வடியும்

அய்த்த மகன் நான் புழிஞ்சா

அத்தனையும் தேன் வடியும்

அய்த்த மகன் நான் புழிஞ்சா

அத்தனையும் தேன் வடியும்

பெ: ஓடுகிற தண்ணியில..

உரசி விட்டேன் சந்தனத்தை..

சேர்ந்துச்சோ.. சேரலையோ..

செவத்த மச்சான் நெத்தியிலே

பெ: மலர் தோட்டத்துக் குயிலே..

இது உமக்காகப் பாடுதுங்க

மலர் தோட்டத்துக் குயிலே..

இது உமக்காகப் பாடுதுங்க

ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க

ஆ: அருவி போல அழுகுறனே..

அறிந்து கொண்டாலாகாதோ

முந்தானையின் ஓரம் என்னை

முடிந்து கொண்டால் ஆகாதோ

பெ: வக்கணையா தாலி வாங்கி

வாசலுக்கு வாரதெப்போ..ஓ..

வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ

உங்க பாதம் பட்ட மண்ணெடுத்து

நான் பல்லு வெளக்கப் போறதெப்போ

பெ: ஓடுகிற தண்ணியில..

உரசி விட்டேன் சந்தனத்தை..

சேர்ந்துச்சோ.. சேரலையோ..

செவத்த மச்சான் நெத்தியிலே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்