வந்தாள் மகாலக்ஷ்மியே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : உயர்ந்த உள்ளம்

பாடலாசிரியர் : கவிஞர் வாலி

இசை : இசைஞானி இளையராஜா

பாடியவர் : எஸ்.பி.பால சுப்ரமணியம்

வருடம் : 1985

✨✨✨✨✨✨✨✨✨

வந்தாள் மகாலக்ஷ்மியே

என்றும் அவள் ஆட்சியே வந்தாள்

மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும்

அவள் ஆட்சியே

அடியேனின் குடி

வாழ தனம் வாழ குடித்தனம்

புக வந்தாள் மகாலக்ஷ்மியே

என் வீட்டில் என்றும் அவள்

ஆட்சியே ஆஆஆ ஆஆஆ

ஆஆஆஆஆ

பக்தனின் வீட்டோடு

தங்கி விட்டாள் பண்டிகை

நாள் பார்த்து ஹா ஹா

பொங்கலிட்டாள் (2)

காமாட்சியோ மீனாட்சியோ

அபிராமியோ சிவகாமியோ

அம்பிகை இங்கொரு கன்னிகை

என்றொரு உருவம் எடுத்து

உலவி நடந்து

வந்தாள் மகாலக்ஷ்மியே

என் வீட்டில் என்றும் அவள்

ஆட்சியே ஹா ஹா

நண்பா பெண்பாவை

கண்வண்ணம் கள்ளம் இல்லாத

பூவண்ணம் கண்டேன் சிங்கார

கைவண்ணம் தொட்டால்

எல்லாமே பொன்வண்ணம்

பந்தம் சொந்தம்

இல்லாமல் வந்தது இங்கொரு

வண்ணமயில் வீடு வாசல்

எல்லாமே மின்னுது மின்னுது

புன்னகையில் மயங்கினேன்

சபாஷ்… ஆஆ ஆ ஹா ஆ ஹா

ஆஆ ஆஆ

என் வழி நேராக

ஆக்கி வைத்தாள் என்னையும்

சீராக மாற்றி வைத்தாள் (2)

தெய்வீகமே பெண்ணானதோ

நான் காணவே தேன் வந்ததோ

மங்களம் பொங்கிடும் மந்திர

புன்னகை இதழில் வடிய

இனிமை விளைய

வந்தாள் மகாலக்ஷ்மியே

என் வீட்டில் என்றும் அவள்

ஆட்சியே ஹா ஹா

அடியேனின் குடி

வாழ தனம் வாழ குடித்தனம்

புக வந்தாள் மகாலக்ஷ்மியே

என் வீட்டில் என்றும் அவள்

ஆட்சியே ஆஆஆ ஹா ஹா

ஹா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்