நறுமுகையே

 ✨✨✨✨✨✨✨✨

படம்: இருவர்

ஆண்டு:1997

இசை: A. R. R

பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ

✨✨✨✨✨✨✨✨✨

நறுமுகையே நறுமுகையே

நீயொரு நாழிகை நில்லாய்

செங்கனி ஊறிய வாய் திறந்து

நீயொரு திருமொழி சொல்லாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்

நெற்றிதரல நீர்வடிய

கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா

அற்றைத் திங்கள் அந்நிலவில்

நெற்றிதரல நீர்வடிய

கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா

திருமகனே திருமகனே

நீ ஒரு நாழிகைப் பாராய்

வெண்ணிறப் புரவியில் வந்தவனே

வேல்விழி மொழிகள் கேளாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்

கொற்றப் பொய்கை ஆடுகையில்

ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா

அற்றைத் திங்கள் அந்நிலவில்

கொற்றப் பொய்கை ஆடுகையில்

ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா

மங்கை மான்விழி அம்புகள்

என் மார் துளைத்ததென்ன

மங்கை மான்விழி அம்புகள்

என் மார் துளைத்ததென்ன

பாண்டி நாடனைக் கண்ட என் உடல்

பசலை கொண்டதென்ன

நிலாவிலே பார்த்த வண்ணம்

கனாவிலே தோன்றும் இன்னும்

நிலாவிலே பார்த்த வண்ணம்

கனாவிலே தோன்றும் இன்னும்

இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை

இடையில் மேகலை இருக்கவில்லை

நறுமுகையே நறுமுகையே

நீயொரு நாழிகை நில்லாய்

செங்கனி ஊறிய வாய் திறந்து

நீயொரு திருமொழி சொல்லாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்

கொற்றப் பொய்கை ஆடுகையில்

ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா

அற்றைத் திங்கள் அந்நிலவில்

நெற்றிதரல நீர்வடிய

கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா

யாயும் யாயும் யாராகியாரோ

நெஞ்சில் நென்றதென்ன

யாயும் யாயும் யாராகியாரோ

நெஞ்சில் நென்றதென்ன

யானும் நீயும் எவ்வழி அறிதும்

உறவு சேர்ந்ததென்ன

ஒரே ஒரு தீண்டல் செய்தாய்

உயிர்க்கொடி பூத்ததென்ன

ஒரே ஒரு தீண்டல் செய்தாய்

உயிர்க்கொடி பூத்ததென்ன

செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்

அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

திருமகனே திருமகனே

நீ ஒரு நாழிகைப் பாராய்

வெண்ணிறப் புரவியில் வந்தவனே

வேல்விழி மொழிகள் கேளாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்

கொற்றப் பொய்கை ஆடுகையில்

ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா

அற்றைத் திங்கள் அந்நிலவில்

நெற்றிதரல நீர்வடிய

கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா

ஆ ஆஆ ஆஆஆ

நீயா

ஆ ஆஆ ஆஆஆ

நீயா

ஆ ஆஆ ஆஆஆ

நீயா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்