படம்: புருஷலக்ஷணம் ஆண்டு:1993 இசை:தேவா பாடியவர்கள்: S.P.B.& K.S.சித்ரா

ஆ: செம்பட்டுப்பூவே வெண்மொட்டுத்தேரே ஸ்ரீரங்கக் காவிரியே பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே மண்ணிலே ஒரு வெண்ணிலா கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா குளிர் மேகம் உந்தன் கண்ணிலா குயில் பாடும் கீதம் சொல்லிலா செம்பட்டுப்பூவே வெண்மொட்டுத்தேரே ஸ்ரீரங்கக் காவிரியே பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே காஞ்சி பட்டுடுத்தி நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ கால ப்ரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும் பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும் புன்னகைதான் பொன்னகையோ கன்னிகை வா வா வா வா செம்பட்டுப்பூவே வெண்மொட்டுத்தேரே ஸ்ரீரங்கக் கா..விரியே பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தே..வதையேஏஏ பெ: பூவின் நெஞ்சுக்குள்ளே புதுவித போதை துள்ளியதேஏஏ காதல் பள்ளியிலே படித்திட ஆசை சொல்லியதே என்னவோ இது என்றும் இல்லாத மயக்கம் இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம் என் விழியில் உன் முகம்தான் நின்றது வா வா வா வா செம்பட்டுப் பூவும் வெண்மொட்டுத் தேரும் ஸ்ரீரங்க நாதருக்கே ஹோய் பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும் என்னுயிர் ராமனுக்கே... ஹோய் மண்ணிலே வந்த வெண்ணிலா இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா குளிர் மேகம் உந்தன் கண்ணிலா குயில் கீதம் காதல் சொல்லிலா ஆ: ஆ.. ஆ.. ஆ...செம்பட்டுப்பூவே வெண்மொட்டுத்தேரே ஸ்ரீரங்கக் காவிரியே பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தே..வதையேஏஏ

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்