மணமாலையும் மஞ்சளும்

படம்:வாத்தியார் வீட்டுப் பிள்ளை ஆண்டு:1989 பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம் ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம் மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம் ஆண் : அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில் நனைந்தே நான் வாழ்த்தினேன் ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம் ஆண் : தாழம்பூ கைகளுக்கு தங்கத்தில் செய்த காப்பு வாழைப்பூ கைகளுக்கு வைரத்தில் செய்த காப்பு ஆண் : உன் அண்ணன் போட வேண்டும் ஊரெல்லாம் காண வேண்டும் கல்யாண நாளில் இங்கே கச்சேரி வைக்கவேண்டும் ஆண் : சின்னஞ்சிறு கிளியே வா…ஆஅ செம்பவழ கொடியே வா…..ஆஅ…. பிறை போல் நுதலில் அணியும் திலகம் நிலையாய் வாழட்டுமே ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம் ஆண் : ஓராண்டு போனப் பின்பு உன் பிள்ளை ஓடி வந்து தாய் மாமன் தோளில் நின்று பொன்னூஞ்சல் ஆடும் அன்று ஆண் : ஏதேதோ காட்சி வந்து கண்ணுக்குள் ஆடுதம்மா ஆனந்த மின்னல் ஒன்று நெஞ்சுக்குள் ஓடுதம்மா ஆண் : குங்குமத்து சிமிழே வா…..ஆ சங்கம் தந்த தமிழே வா…..ஆஅ கொடியில் அரும்பி மடியில் மலர்ந்த மலரே நீ வாழ்கவே ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம் ஆண் : அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில் நனைந்தே நான் வாழ்த்தினேன் ஆண் : மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்