அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: தலைவாசல்

ஆண்டு:1992

இசை: பாலபாரதி

வரிகள்:வாலி

பாடகி: ஜானகி


✨✨✨✨✨✨✨✨✨

அதிகாலை காற்றே நில்லு

இதமான பாடல் சொல்லு

இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே

இது ஒரு புது சுகமே

அதிகாலை காற்றே நில்லு

இதமான பாடல் சொல்லு


இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது

இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது

ஓ .. காலை மேகம் சோலை ஆகும்

வானம் எங்கள் சாலை ஆகும்

தாமரை கொடை விறிக்கும்


அதிகாலை காற்றே நில்லு

இதமான பாடல் சொல்லு


மலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது

பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது

ஓ .. வானவில்லின் வண்ணம் யாவும்

பாதம் வந்தே கோலம் போடும்

காவியம் தலை வணங்கும்


அதிகாலை காற்றே நில்லு

இதமான பாடல் சொல்லு

இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே

இது ஒரு புது சுகமே

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்