பொன்னை விரும்பும் பூமியிலே

 ✨✨✨✨✨✨✨✨

படம்: ஆலயமணி

ஆண்டு:1962

பாடியவர்:T.M.S

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

வரிகள்:கண்ணதாசன்

✨✨✨✨✨✨✨✨✨

பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே

பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே


ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே

ஆலயமணியின் இன்னிசை நீயே(2)

தாய்மை எனக்கே தந்தவள் நீயே

தங்க கோபுரம் போல வந்தாயே

புதிய உலகம் புதிய பாசம்

புதிய தீபம் கொண்டு வந்தாயே


(பொன்னை விரும்பும் பூமியிலே…)


பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்

பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)

அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்

அழைத்து வந்தார் என்னிடம் உன்னை

இந்த மனமும் இந்த குணமும்

என்றும் வேண்டும் என்னுயிரே


(பொன்னை விரும்பும் பூமியிலே…)


ஆலமரத்தின் விழுதினைப் போலே

அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)

வாழைக் கன்று அன்னையின் நிழலில்

வாழ்வது போலே வாழவைத்தாயே

உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு

உள்ளம் ஒன்றே என்னுயிரே


(பொன்னை விரும்பும் பூமியிலே…)

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்