உன்னைக் கேட்டுப்பார் நீ யாரென்று

 ✨✨✨✨✨✨✨

பாபா புகழ் மாலை

இசை:இளையராஜா

✨✨✨✨✨✨✨

உயிர் உருக்கும் வாலியின் பாடல்

வரிகள் 

பாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி

ஆண்டு:2010

உன்னைக் கேட்டுப்பார் நீ யாரென்று

அந்த உண்மை அறிவாயோ நீ எவரென்று

அவனைக் கேட்டுப் பார்  நீ யாரென்று

அவன் தான் அறிவானே நீ எவனென்று

கள்ளம் நிறைந்த  உள்ளம் தன்னை  கழுவிட வேண்டாமா 

காமம் புகுந்து கலக்கிய மனதை துடைத்திட வேண்டாமா

கள்ளம் நிறைந்த  உள்ளம் தன்னை  கழுவிட வேண்டாமா 

காமம் புகுந்து கலக்கிய மனதை துடைத்திட வேண்டாமா

நீ ஒரு முறை சொல்லிப்பார் ஓம் ஸாய்

உயர் நலங்களை சேர்த்திடுமே ஓம் ஸாய்

உன்னைக் கேட்டுப்பார் நீ யாரென்று

அந்த உண்மை அறிவாயோ நீ எவரென்று

வீணருக்கும் ஈணருக்கும் அங்கோர் இடமுண்டு

ஊனுருக்கும் உயிர் உருக்கும் அவன் திருமுகமுண்டு

வீணருக்கும் ஈணருக்கும் அங்கோர் இடமுண்டு

ஊனுருக்கும் உயிர் உருக்கும் அவன் திருமுகமுண்டு

ஆடாத ஆட்டம் நீ ஆடினாய் கூடாததெல்லாம் கூட்டாக்கினாய்

திருந்திட ஓர் பரிகாரம் அவன் திருக்கோயில் தான்

ஒரு முறைப் போ பலமுறைப் போ 

வருகின்ற தலைமுறை

விளங்கிடும் விளங்கிடும்

உன்னைக் கேட்டுப்பார் நீ யாரென்று

அந்த உண்மை அறிவாயோ நீ எவரென்று

அவனைக் கேட்டுப் பார்  நீ யாரென்று

அவன் தான் அறிவானே நீ எவனென்று

உலவி வந்த இடத்தை எல்லாம் உலகோர் தொழுகின்றார்

விளங்குகின்ற திருத்தலத்தை

கை குவித்தே வணங்குகின்றார்

உலவி வந்த இடத்தை எல்லாம் உலகோர் தொழுகின்றார்

விளங்குகின்ற திருத்தலத்தை

கை குவித்தே வணங்குகின்றார்

கை கூப்பி நின்றால் கண்ணீர் வரும்

பாபாவின் தோற்றம்

கண்ணில் வரும்

நின்றாலும் நடந்தாலும் நினைத்திரு அவன் நாமம்

அதைவிட ஓர் துணையுமுண்டோ

இருக்கின்ற வரையிலும்

இனி ஒரு பயமில்லை

உன்னைக் கேட்டுப்பார் நீ யாரென்று

அந்த உண்மை அறிவாயோ நீ எவரென்று

அவனைக் கேட்டுப் பார்  நீ யாரென்று

அவன் தான் அறிவானே நீ எவனென்று

கள்ளம் நிறைந்த  உள்ளம் தன்னை  கழுவிட வேண்டாமா 

காமம் புகுந்து கலக்கிய மனதை துடைத்திட வேண்டாமா

கள்ளம் நிறைந்த  உள்ளம் தன்னை  கழுவிட வேண்டாமா 

காமம் புகுந்து கலக்கிய மனதை துடைத்திட வேண்டாமா

நீ ஒரு முறை சொல்லிப்பார் ஓம் ஸாய்

உயர் நலங்களை சேர்த்திடுமே ஓம் ஸாய்

உன்னைக் கேட்டுப்பார் நீ யாரென்று

அந்த உண்மை அறிவாயோ நீ எவரென்று

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்