முத்து முத்து மகளே! முகம் காணாத மகளே


✨✨✨✨✨✨✨✨✨

படம்: கல்கி

பாடகிகள்:சித்ரா, அனுராதா ஸ்ரீராம்

இசை: தேவா

வரிகள்: கவியரசர் இளந்தேவன்

✨✨✨✨✨✨✨✨✨

முத்து முத்து மகளே! முகம் காணாத மகளே!

மாதங்கள் பத்து மனதினில் சுமந்து

கற்பனையில் பெற்ற கண்மணியே!

நான் உனக்கு கவிதையில் எழுதும் கடிதம்

எழுதுகிறேன் ஒரு கடிதம்


வானத்து மலரே! வையத்து நிலவே!

வாழ்க்கையின் பொருளே வா!

எழுதுகிறேன் ஒரு கடிதம்.

மலடியின் மகளே மகள் எனும் கனவே

மடியினிலே நீ வா!

எழுதுகிறேன் ஒரு கடிதம்.


பாறையில் மலர்ந்த தாமரையே!

இரவினில் எழுந்த சூரியனே!

எழாமலே எழும் நிலா நீயே!

எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்.


முந்நூறு நாள் கற்பத்திலே வாராத பெண் நீயடி!

எந்நாளுமே நான் பொம்மைதாய் என்றாலும் தாய்தானடி!

உலாவும் வானம்பாடியாய் பண்பாடி வாழ்க கண்ணே!

புறாவைப்போல சாந்தமாய்

பண்பாடு போற்று கண்ணே!

நாளொரு மேன்மை நீ பெறுவாய்

நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்

பெறாமலே பெரும் சுகம் நீயே!

எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்.

சிந்தாமணி என் கண்மணி சிற்றாடை நீ கட்டடி!

என் மாளிகை முற்றத்திலே பொன்னூஞ்சல் நீ ஆடடி!

குலாவும் அன்புக்கோகிலம் எங்கேயும் கானம் பாடு!

கனாவில் கூட சோம்பலே இல்லாமல் ஞானம் தேடு!

நல்லவளாக நடை போடு! வல்லவளாகிட தடை ஏது!

விழாமலே விழும் மழை நீயே!

எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்.


பொல்லாதது உன் பூமி தான்

போராட்டம்  தான் வாழ்வடி!

கொல்லாமலே கொல்வாரடி குற்றங்கள் சொல்வாரடி!

வராத துன்பம் வாழ்விலே வந்தாலும் நேரில் மோது!

பெறாத வெற்றி இல்லையே என்றே நீ வேதம் ஓது!

ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி

உரிமைக்கு போரிட தேவையடி!

தொடாமலே சுடும் கனல் நீயே!


வானத்து மலரே! வையத்து நிலவே!

வாழ்க்கையின் பொருளே வா!

 மலடியின் மகளே மகள் எனும் கனவே

மடியினிலே நீ வா!

பாறையில் மலர்ந்த தாமரையே!

இரவினில் எழுந்த சூரியனே!

எழாமலே எழும் நிலா நீயே!

எழுதுகிறேன் ஒரு கடிதம்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்