காற்றில் எந்தன் கீதம்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:ஜானி

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பாடியவர்: எஸ்.ஜானகி

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றை தேடுதே


காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றை தேடுதே


அலைபோல நினைவாக…

சில்லென்று வீசும் மாலை நேர


காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றை தேடுதே

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட

என்னுள்ளே ஒரு வீணை ராகம் தேட

அன்புள்ள நெஞ்சை காணாதோ

ஆனந்த ராகம் பாடாதோ

கண்கள் எங்கும் நெஞ்சின் பாவம் மேலும் ஏற்றும்

காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றை தேடுதே

நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்

நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்

மௌனத்தின் ராகம் கேளாதோ

மௌனத்தில் தாளம் போடாதோ

வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்

காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றை தேடுதே


அலைபோல நினைவாக…

சில்லென்று வீசும் மாலை நேர


காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றை தேடுதே.

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்