ஆருயிரே ஆருயிரே அன்பே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:மதராசப்பட்டிணம்

இசை:ஜீ.வி

பாடியவர்கள்: சோனு நிகம் & சைந்தவி

வரிகள்: நா.முத்துக்குமார்

✨✨✨✨✨✨✨✨✨

ஆருயிரே ஆருயிரே அன்பே

உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

நீயில்லையேல் நான் இல்லையே

நீ போகும் முன்னே

அன்பே நான் சாகிறேன்

உயிரே என் உயிரே

எனக்குள் உன் உயிரே

கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்

என்னை பிரிகிறேன்

ஆருயிரே ஆருயிரே அன்பே

உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

விழிதாண்டி போனாலும்

வருவேன் உன்னிடம்

எங்கே நீ தொலைந்தாலும்

நெஞ்சில் உன் முகம்

காற்றென மாறுவேனோ ஓ…ஓ …

உன் சுவாசத்தில் சேர்வேனோ

நீ சுவாசிக்கும்போதும்

வெளிவரமாட்டேன்

உனக்குள் வசிப்பேனே

உயிரே என் உயிரே

உனக்குள் என் உயிரே

உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்

என்னை பிரிகிறேன்

ஆருயிரே ஆருயிரே அன்பே

உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

கொன்றாலும் அழியாத

உந்தன் ஞாபகம்

கண்ணீரில் முடிந்தால்தான்

காதல் காவியம்

நேற்றினில் வாழ்வேனோ

உன் தோள்களில் சாய்வேனோ

உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து

காலங்கள் மறப்பேனோ ஓஓ

உயிரே என்னுயிரே

நாமே ஓருயிரே

நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்

உயிரை துறக்கிறேன் ஏன்...

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்