காதலா காதலா கண்களால் என்னை தீண்டு

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:தாய்க்கு ஒரு தாலாட்டு

ஆண்டு: 1986

பாடியவர்கள்: இளையராஜா & K.S.சித்ரா

இசை:இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

காதலா காதலா

கண்களால் என்னை தீண்டு

காதலி காதலி

கண்களால் என்னை தீண்டு

காதல் ஒரு வேதம்

கண்கள் அதை ஓதும்

காதலி காதலி

கண்களால் என்னை தீண்டு

நீரோடையின் ஓசையில்

உந்தன் பேரைக் கேட்கிறேன்

பூஞ்சோலையின் பூக்களில்

உன்னை நானும் பார்க்கிறேன்

தேவனே உன்னிலே

என்னைத் தேடி பார்க்கிறேன்

நீ விடும் மூச்சிலே

நானும் கொஞ்சம் வாழ்கிறேன்

என் தேவியே உன் பேச்சிலே

ஏதோ இசை கேட்கிறேன்

காதலா காதலா

கண்களால் என்னை தீண்டு

மாலைகள் சூடினால்

மன்னவா எல்லை தாண்டு

காதல் ஒரு வேதம்

கண்கள் அதை ஓதும்

காதலா காதலா

கண்களால் என்னை தீண்டு..

கண்ணா உன்னைக் கேட்கிறேன்

காதல் என்ன தீருமா

காலங்களும் மாறலாம்

கங்கை பாதை மாறுமா

தேவியே தேவியே

என்ன கேள்வி கேட்கிறாய்

ஆவி நீதானடி

யாரை ஆழம் பார்க்கிறாய்

காதல் நதியில் நான் மூழ்கினேன்

நீயே கரை சேர்க்கிறாய்

காதலி காதலி

கண்களால் என்னை தீண்டு

மாலைகள் சூடினால்

மன்னவா எல்லை தாண்டு

காதல் ஒரு வேதம்

கண்கள் அதை ஓதும்

காதலா காதலா

கண்களால் என்னை தீண்டு..

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்