தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : கோபுரவாசலிலே

பாடலாசிரியர் : வாலி

பாடியவர்: எஸ்.ஜானகி

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

வருவாயோ வாராயோ

ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே

ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே

என் நெஞ்சமே உன் தஞ்சமே

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

நள்ளிரவில் நான் கண் விழிக்க

உன் நினைவில் என் மெய்சிலிற்க

பஞ்சணையில் நீ முள்விரித்தாய்

பெண் மனதை நீ ஏன் பறித்தாய்

ஏக்கம் தீயாக ஏதோ நோயாக

காணும் கோலங்கள் யாவும் நீயாக

வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

வருவாயோ வாராயோ

ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே

என் நெஞ்சமே உன் தஞ்சமே

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்

முப்பொழுதும் உன் கற்பனைகள்

சிந்தனையில் நம் சங்கமங்கள்

ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்

காலையில் நான் பாடும் காதல் பூபாளம்

காதில் கேட்காதோ கண்ணா என்னாளும்

ஆசையில் நாள் தொழும் ஆலயம் நீயல்லவா

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

வருவாயோ வாராயோ

ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே

என் நெஞ்சமே உன் தஞ்சமே

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா.

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்