உனை தெய்வம் என்பதா குருநாதன் என்பதா எனை பார்த்து பார்த்து

 ✨✨✨✨✨✨✨✨✨

ஐயப்பன் பக்தி பாடல்

பாடியவர்:சீர்காழி சகோதரிகள்

✨✨✨✨✨✨✨✨✨

உனை தெய்வம் என்பதா

குருநாதன் என்பதா 

எனை பார்த்து பார்த்து வளர்ப்பதனால்

அன்னை என்பதா (உ)

உன்னைக் கடவுள் என்பதா

கருணை வடிவம் என்பதா 

ஐயா ஞான தானம் தந்த உன்னைத் 

தந்தை என்பதா. (உ).

சேரும் செல்வமெல்லாம் உன் அருளன்றோ 

பாடும் பாடல் எல்லாம் உன் தயவன்றோ (2)

எந்த நேரமும் உன் நினைவன்றோ 

எந்தன் குடும்பமே உன்னை மறக்குமோ

ஒவ்வொரு அரிசியிலும் உன் முகமன்றோ 

சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

நீ இருக்கின்றாய் அது போதும் 

சில நேரம் உன்னை நினைக்கும் போது 

கண் கலங்குதப்பா. (உ).

வாழ்க்கை படகு ஆடி ஓடுகின்றதே 

போகும் பயணம் எங்கே? நானறியேனே(2)

கரையை பார்க்கிறேன் எதுவும் தெரியல

கடலைப் பார்க்கிறேன் அலையும் அடங்கல 

உன்னைத் தவிர எனக்கு வேறு துணையில்லை 

சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

சகலமும் எனக்கு சபரி தானப்பா 

என் உயிரில் கலந்து நாவில் புரளும் 

எங்கள் ஐயப்பா (உ)

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்