நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்

✨✨✨✨✨✨✨✨✨✨

படம்:சின்னத் தாயி

ஆண்டு:1992

இசை:இளையராஜா

வரிகள்:வாலி

பாடியவர்கள்: கே. ஜே.யேசுதாஸ் & ஸ்வர்ணலதா

✨ ✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : நான் ஏரிக்கரை

மேலிருந்து எட்டுத் திசை

பார்த்திருந்து ஏந்திழைக்குக்

காத்திருந்தேன் காணல

ஆண் : மணி ஏழு எட்டு

ஆன பின்னும் ஊரடங்கி

போன பின்னும் சோறு

தண்ணி வேணுமுன்னு

தோணல

ஆண் : என் தெம்மாங்கு

பாட்ட கேட்டு தென்காத்து

ஓடி வந்து தூதாக போக

வேணும் அக்கரையில

ஆண் : நான் உண்டான

ஆசைகள உள்ளார பூட்டி

வச்சி ஒத்தையில

வாடுறேனே இக்கரையில

பெண் : { நான் மாமரத்தின்

கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு

காத்திருந்தேன் காணல

பெண் : அட சாயங்காலம்

ஆன பின்னும் சந்தை மூடி

போன பின்னும் வீடு போயி

சேர்ந்திடத்தான் தோணல } (2)

பெண் : என் தெம்மாங்கு

பாட்ட கேட்டு தென்காத்து

ஓடி வந்து தூதாக‌ போக

வேணும் அக்கரையில

பெண் : நான் உண்டான

ஆசைகள உள்ளார பூட்டி

வச்சி திண்டாடி நிக்கிறேனே

இக்கரையில

ஆண் : நான் ஏரிக்கரை

மேலிருந்து எட்டுத் திசை

பார்த்திருந்து ஏந்திழைக்குக்

காத்திருந்தேன் காணல

ஆண் : மணி ஏழு எட்டு

ஆன பின்னும் ஊரடங்கி

போன பின்னும் சோறு

தண்ணி வேணுமுன்னு

தோணல

ஆண் : தூரக் கிழக்கு

கரை ஓரம் தான் தாழப்

பறந்து வரும் மேகம் தான்

ஆண் : உன்கிட்ட சேராதோ

என் பாட்ட கூறாதோ

ஒண்ணாக நாம் கூடும்

சந்தர்ப்பம் வாராதோ

பெண் : உன் கூட நானும்

சேர ஒத்த காலில் நின்னேனே

செந்நாரை கூட்டத்தோடு

சேதி ஒண்ணு சொன்னேனே

ஆண் : கண்ணாலம்

காட்சி எப்போது

எந்நாளும் என் நேசம்

தப்பாது

பெண் : நான் மா மரத்தின்

கீழிருந்து முன்னும் பின்னும்

பார்த்திருந்து மாமனுக்கு

காத்திருந்தேன் காணல

ஆண் : மணி ஏழு எட்டு

ஆன பின்னும் ஊரடங்கி

போன பின்னும் சோறு

தண்ணி வேணுமின்னு

தோணல

பெண் : மாமன் நெனப்பில்

சின்னத் தாயிதான் மாசக்

கணக்கில் கொண்ட நோயிதான்

மச்சான் கை பட்டாக்கா

மூச்சூடும் தீராதோ

அக்காளின் பொண்ணுக்கோர்

பொற்காலம் வாராதோ

ஆண் : கையேந்தும்

ஆட்டு குட்டி கன்னிப்

பெண்ணாய் மாறாதோ

மையேந்தும் கண்ணை

காட்டி மையல் தீர

பேசாதோ

பெண் : உன்னாலே

தூக்கம் போயாச்சு

உள்ளார ஏதேதோ

ஆயாச்சு

ஆண் : நான் ஏரிக்கரை

மேலிருந்து எட்டுத் திசை

பார்த்திருந்து ஏந்திழைக்குக்

காத்திருந்தேன் காணல

ஆண் : மணி ஏழு எட்டு

ஆன பின்னும் ஊரடங்கி

போன பின்னும் சோறு

தண்ணி வேணுமுன்னு

தோணல

பெண் : என் தெம்மாங்கு

பாட்ட கேட்டு தென்காத்து

ஓடி வந்து தூதாக‌ போக

வேணும் அக்கரையில

பெண் : நான் உண்டான

ஆசைகள உள்ளார பூட்டி

வச்சி திண்டாடி நிக்கிறேனே

இக்கரையில

ஆண் : நான் ஏரிக்கரை

மேலிருந்து எட்டுத் திசை

பார்த்திருந்து ஏந்திழைக்குக்

காத்திருந்தேன் காணல

பெண் : அட சாயங்காலம்

ஆன பின்னும் சந்தை மூடி

போன பின்னும் வீடு போயி

சேர்ந்திடத்தான் தோணல

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்