ஆராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை

 ✨✨✨✨✨✨✨

படம் : பொண்டாட்டி தேவை (1990)

இசை : இளையராஜா

பாடியவர்கள் : அருண்மொழி, K.S.சித்ரா

பாடல்வரிகள் : புலமைபித்தன்

✨✨✨✨✨✨✨


ஆஆ... ஆஆஆ.... ஆ... ஆ....

ஆஆ... ஆஆஆ ...ஆ... ஆஆஆ....

ஆஆ...  ஆஆ.... ஆஆ....

ஆஆ.... ஆஆ... ஆஆ... ஆஆ...


ஆராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை

உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை

இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை

இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை

ஆரிராராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை

உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை


மார்பிலே போட்டு நான் பாட வழிதான் இல்லையே

மடியிலே போட்டுதான் பார்க்க நினைத்தால் தொல்லையே

வயதில் வளர்ந்த குழந்தையே வம்பு கூடாது

சிரித்து மயக்கும் உன்னையே நம்பக் கூடாது

மேலாடைப் பார்த்துதான் நீ சிரித்தால் ஆகுமா

மேனியே கூசுதே ஆசை வேர் விடுதே


ஆரிராராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை

உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை

இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை

இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை

ஆரிராராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை

உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை



தோளிலே நாளெல்லாம்


சாய்ந்து இருந்தால் போதுமே

வாழ்விலே ஆனந்தம் மேலும் நிறைந்தே கூடுமே

இதயம் எழுதும் இனிமையே... ம்... இன்பம் வேறேது

கனவில் வளர்ந்த கவிதையே... ம்ம்... என்றும் மாறாது

நீ என்றும் தேனென்றும் வேதங்கள் ஏதம்மா

நினைத்ததும் இனித்திடும் காதல் பூமழையே


ஆரிராராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை

உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை


இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை

இது போல உறவுமில்லை இனி என்றும் பிரிவதில்லை


ஆரிராராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை

உன் பேர் சொல்லி வாழ்த்து கூற நீயும் சேயில்லை


ம் ம்ம்... ம் ம்ம்... ம்ம்ம்ம்....

ம்ம்... ம் ம்ம்... ம் ம்ம்... ம்ம்ம்ம்...


✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்