தந்தையுடன் அன்னை செய்த தவம் போலும் - ஒரு

 ✨✨✨✨✨✨✨✨✨

முருகன் பக்தி பாடல்

பாடியவர்:T.M.S

✨✨✨✨✨✨✨✨✨

தந்தையுடன் அன்னை செய்த தவம் போலும் - ஒரு

குழந்தையை போல் கனவில்  திருக்கோலம்

தந்து விளையாடினான் கைமேலும்-கந்தன்

தந்தானத் தந்தானா என்று மடிமேலும் (தந்தை)

வெள்ளி நிற நிலவென்னும் பெண்ணோடு 

அவன்

விட்டு விட்டு தொட்டு தொட்டு கண்ணோடு(2)

தள்ளி விளையாடினான் பண்ணோடு கந்தன்

தந்தானத் தந்தானா என்று என்னோடு (தந்தை)

சேவித்த கைகளுடன் கைகோர்த்து - என்

சிந்தையெனும அரங்கத்தில் கால் பதித்து(2)

தாவி விளையாடினான் தடம்பார்த்து... (2)

கந்தன்

தந்தானத் தந்தானா என்று தமிழ் சேர்த்து (தந்தை)

ஆ.....ஆ....ஆ....ஆ......

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்