பால் வண்ணம் பருவம் கண்டு

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:பாசம்

ஆண்டு:1962

பாடகி : பி.சுசீலா

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசை : 

விஸ்வநாதன் ராமமூர்த்தி

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : பால் வண்ணம்

பருவம் கண்டு வேல்

வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான்

கண்டு வாடுகிறேன்

பெண் : கண் வண்ணம்

அங்கே கண்டேன் கை

வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய்

கொண்டு வாடுகிறேன்

பெண் : { கன்னம் மின்னும்

மங்கை வண்ணம் உந்தன்

முன்னும் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில்

வைக்க ஆசை இல்லையா } (2)

பெண் : { கார் வண்ண

கூந்தல் தொட்டு தேர்

வண்ண மேனி தொட்டு } (2)

பூ வண்ண பாடம் சொல்ல

எண்ணம் இல்லையா

ஆண் : பால் வண்ணம்

பருவம் கண்டு வேல்

வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான்

கண்டு வாடுகிறேன்

ஆண் : { மஞ்சள் வண்ண

வெயில் பட்டு கொஞ்சும்

வண்ண வஞ்சிச் சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும்

போது ஆசையில்லையா } (2)

ஆண் : { நேர் சென்ற

பாதை விட்டு நான்

சென்ற போது வந்து } (2)

ஆண் : வா வென்று

அள்ளிக் கொண்ட

மங்கை இல்லையா

பெண் : கண் வண்ணம்

அங்கே கண்டேன் கை

வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய்

கொண்டு வாடுகிறேன்

பெண் : பருவம் வந்த

காலம் தொட்டு பழகும்

கண்கள் பார்வை கெட்டு

என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா

ஆண் : நான் கண்டு

மாலையிட்டு நான்

உன்னை தோளில்

வைத்து ஊர்வலம்

போய் வர ஆசை

இல்லையா

பெண் : கண் வண்ணம்

அங்கே கண்டேன் கை

வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய்

கொண்டு வாடுகிறேன்

ஆண் : பால் வண்ணம்

பருவம் கண்டு 

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான்

கண்டு வாடுகிறேன்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்