ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : என்னருகில் நீ இருந்தால் 

பாடியவர் : மனோ மற்றும் உமா ரமணன் 

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே

ஹும் ஹும் ஹும் ....

உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே

ஹும் ஹும் ஹும் ....

தேடாத நேரமில்லையே

தீராத காதல் தொல்லையே

ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே

ஹும் ஹும் ஹும் .....

உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே

ஹும் ஹும் ஹும்

மாலை நேர பூக்களே

ஆவல் மீறி பார்க்குதே

வானம் காதல் வீதிதான்

வானம்பாடி பாடுதே

இரவெல்லாம் உன் உறவோடு

எண்ணாத சொர்க்கலோகம்

கதை பேசும் பெண்ணின் கண்ணில்

கவிதை தென்றல் வீசும்

நினைவில் ஊஞ்சல் ஆடும்

விரகதாபம் மேலும் மேலும் ஏறும்

உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே

ஹும் ஹும் ஹும் .....

ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே

ஹும் ஹும்

நாணம் மூடும் மௌனமே

கூறும் காதல் வேதமே

காதல் தேவன் பேசினால்

காலம் ஊமை ஆகுமே

இதழ் மேலே என் இதழ் சேர

பெண் உதவி செய்ய வேண்டும்

மடி மேலே தலை சாய

என் மனது உன்னைக் கேட்கும்

கேள்வி என்ன கண்ணே

நான் என்றும் உந்தன் சொந்தமே

ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே

ஹும் ஹும் ஹும் ....

உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே

ஹும் ஹும் ஹும் ....

தேடாத நேரமில்லையே

தீராத காதல் தொல்லையே

ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே

ஹும் ஹும் ஹும் ....

உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே

ஹும் ஹும் ஹும்

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்