தந்தானைத் துதிப்போமே – திருச் சபையாரே கவி –


✨ஜிக்கி அவர்கள் குரலில் க்ளாஸிக் பாடல் ஒன்று👇

✨✨✨✨✨✨✨✨✨

தந்தானைத் துதிப்போமே – திருச்

சபையாரே கவி – பாடிப்பாடி

தந்தானைத் துதிப்போமே

விந்தையாய் நமக்கனந்தனந்தமான

விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) – தந்தானை


1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்

மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து

ஒய்யாரத்துச் சீயோனே


ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி

செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை


2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்

காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து

கண்ணாரக் களித்தாயே

எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை

இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை


3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை

முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து

சுத்தாங்கத்து நற்சபையே


சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்

ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2) – தந்தானை


4. தூரம் திரிந்த சீயோனே – உனைத்

தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி

தூரம் திரிந்த சீயோனே

ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை

அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2) – தந்தானை


5. சிங்காரக் கன்னிமாரே – உம்

அலங்காரக் கும்மி அடித்துப் படித்து

சிங்காரக் கன்னிமாரே

மங்காத உம் மணவாளன் இயேசுதனை

வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) – தந்தானை

✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்