ஏனோ இன்பமே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: வஞ்சிக்கோட்டை வாலிபன்

இசை: C.ராமச்சந்திரா

ஆண்டு:1958

வரிகள்: கொத்தமங்கலம் சுப்பு

பாடியவர்கள்:P.லீலா, ஜிக்கி


✨✨✨✨✨✨✨✨✨

ஏனோ இன்பமே

புதுமையாய் காண்பதே

காதல் என்பது இது தானோ

இது தானோ அறியேனே...


கண்ணும் கண்ணும் கலந்து

சொந்தம் கொண்டாடுதே

எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே

கண்ணும் கண்ணும் கலந்து

சொந்தம் கொண்டாடுதே

எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே

கன்னி என்றேனடி கைகளை பிடித்தார்

காதலி என்றென்னை கொஞ்சியே அழைத்தார்


கண்ணும் கண்ணும் கலந்து

சொந்தம் கொண்டாடுதே

எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே


சபாஷ் சரியான போட்டி (வசனம்)


ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே

ஜகத்தை மயக்கிடுவேனே

கல கல கல கலவென்று ஜோராய்

கையில் வளை பேசும் பாராய்

ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே

ஜகத்தை மயக்கிடுவேனே

கல கல கல கலவென்று ஜோராய்

கையில் வளை பேசும் பாராய்


ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி

ஆடுவேன் பாரடி

இனி அனைவரும் மயங்கிட


ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே

ஜகத்தை மயக்கிடுவேனே

கல கல கல கலவென்று ஜோராய்

கையில் வளை பேசும் பாராய்..


ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்

அன்பின் பாதையில் அணையிடலாமோ

ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்

அன்பின் பாதையில் அணையிடலாமோ

பேதமையாலே மாதே இப்போதே

காதலை வென்றிட கனவு காணாதே


சாதுர்யம் பேசாதேடி

என் சலங்கைக்கு பதில் சொல்லடி

சாதுர்யம் பேசாதேடி

என் சலங்கைக்கு பதில் சொல்லடி

நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி

நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி


ஆடும் மயில் எந்தன் முன்னே

என்ன ஆணவத்தில் வந்தாயோடி

பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு

படமெடுத்து ஆடேதடி

நீ படமெடுத்து ஆடேதடி


இன்னொருத்தி நிகராகுமோ

எனக்கின்னொருத்தி நிகராகுமோ

இடி இடித்தால் மழையாகுமோ பேதை பெண்ணே

இன்னொருத்தி நிகராகுமோ


மின்னலுக்கு அஞ்சேனடி

வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி

இந்த மின்னலுக்கு அஞ்சேனடி

வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி.

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்