காலை நேர ராகமே காற்றில்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:  ராசாவே உன்னை நம்பி

ஆண்டு:1988

வரிகள்: கங்கை அமரன்

இசை: இளையராஜா

பாடியவர்: சித்ரா

✨✨✨✨✨✨✨✨✨

காலை நேர

ராகமே காற்றில்

சேர்ந்து கேட்குமே


புள்ளினங்கள்

மெல்லிசையும் தென்றல்

இடும் இன்னிசையும் வந்து

வந்து இந்த நெஞ்சை

சொந்தமென பாடுமே


காலை நேர

ராகமே காற்றில்

சேர்ந்து கேட்குமே


கட்டிலிலே சொல்லி

தந்த ராகங்களை காலையிலே

எண்ணி கொள்ள ஆனந்தமே

மெத்தையிலே போட்ட விதை

தொட்டிலிலே பூத்து வரும்


இஷ்ட பட்டு கேட்ட

கதை இன்பங்களை சேர்த்து

வரும் அன்பு மனம் ஒன்றை

ஒன்று கொண்டாடும் அந்த

சுகம் வந்து நின்றதே இன்று

முதல் என்னுலகில் சந்தோசம்

இன்னிசையை பாடுகின்றதே


காலை நேர

ராகமே காற்றில்

சேர்ந்து கேட்குமே


அன்பு என்னும்

சின்ன சின்ன நூல் எடுத்து

துன்பங்களை எண்ணி

எண்ணி கோர்த்து

வைத்தேன்


போட்டு வைத்தேன்

கோலம் ஒன்று உன் மனதில்

நானும் இன்று கேட்கும் வரம்

இன்று ஒன்று காலமெல்லாம்

நாமும் ஒன்று


பாசத்துக்கு இன்று

முதல் வெள்ளோட்டம்

பந்தமென்னும் பாதை

தன்னிலே நேசம் அதில்

அன்பு என்னும் முன்னோட்டம்

நித்தம் வந்து ஒட்டி

கொண்டதே …………….


காலை நேர

ராகமே காற்றில்

சேர்ந்து கேட்குமே


புள்ளினங்கள்

மெல்லிசையும் தென்றல்

இடும் இன்னிசையும் வந்து

வந்து இந்த நெஞ்சை

சொந்தமென பாடுமே


காலை நேர

ராகமே காற்றில்

சேர்ந்து கேட்குமே

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்