எங்கிருந்தோ அழைக்கும்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: என் ஜீவன் பாடுது

ஆண்டு:1988

இசை:இளையராஜா

பாடகி: லதா மங்கேஷ்கர்

வரிகள்:பஞ்சு அருணாச்சலம்


✨✨✨✨✨✨✨✨✨


ஓ ஓ …..


எங்கிருந்தோ அழைக்கும் என் கீதம்


என் உயிரில் கலந்தே அது பாடும்

சேர்ந்திடவே உனையே ..ஓ...ஓ

ஏங்கிடுதே மனமே

சேர்ந்திடவே உனையே ..ஓ...ஓ

ஏங்கிடுதே மனமே


எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்


என் உயிரில் கலந்தே அது பாடும்


 வசந்தமும் இங்கே வந்ததென்று


வாசனை மலர்கள் சொன்னாலும்


வசந்தமும் இங்கே வந்ததென்று


வாசனை மலர்கள் சொன்னாலும்


 தென்றலும் இங்கே வந்து நின்று


இன்பத்தின் கீதம் தந்தாலும்


நீ இன்றி ஏது வசந்தம் இங்கே


 நீ இன்றி ஏது ஜீவன் இங்கே


சேர்ந்திடவே உனையே ..ஓ ...


எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்


 என் உயிரில் கலந்தே அது பாடும்


 சேர்ந்திடவே உனையே ..ஓ...ஓ


ஏங்கிடுதே மனமே


காதலில் உருகும் பாடல் ஒன்று


கேட்கிறதா உன் காதினிலே


காதலில் உருகும் பாடல் ஒன்று


கேட்கிறதா உன் காதினிலே


 காதலின் உயிரை தேடி வந்து


கலந்திட வா ஏன் ஜீவனிலே


உயிரினைத் தேடும் உயிர் இங்கே


ஜீவனைத் தேடும் ஜீவன் இங்கே


சேர்ந்திடவே உனையே ..ஓ ...


எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்


என் உயிரில் கலந்தே அது பாடும்


 சேர்ந்திடவே உனையே ..ஓ ...


ஏங்கிடுதே மனமே


 எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்


 என் உயிரில் கலந்தே அது பாடும்


 எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்


எங்கிருந்தோ அழைக்கும்.....


✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்