உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:விஸ்வரூபம்

இசை:சங்கர் -எஹ்சான்- லாய்(சங்கர்  மகாதேவன்,எஹ்சான் நூரணி,லாய் மென்டோன்ஸா)

பாடியவர்: சங்கர்  மகாதேவன்&  கமல்ஹாசன்

வரிகள்:கமல்ஹாசன்

✨✨✨✨✨✨✨✨✨

தக தக தக

தின தின தின

நக நக நக

திக்கிட தான தான தான

திக்கிட திக்கிட தகின தான

தாக்குடு தான

திக்கிட்டு தக்கட்ட தி தி தி

தாணு தாணு கென் தனான

தாணு தாணு கென் தனான


தாணு தாணு கென் தனான

அதிநவநீதா அபிநயராஜா

கோகுலபால கோடிபிரகாஷா

விரக நரக ஸ்ரீ ரக் ஷக மாலா

எத்தனைமுறை நான் ஏங்கி சாவேன்

இத்தவணை எனை ஆட்கொள்வாயா

சூடிய வாடலை சூடிய வா

களவாடிய சிந்தை திரும்பத்தா

பூதகியாக பணித்திடுவாயா

பாவை விரகம் பருகிடுவாயா

ஆயர்தம் மாயா நீ வா

மாயா மாயா

ஆயர்தம் மாயா நீ வா

மாயா மாயா

ஆயர்தம் மாயா நீ வா

மாயா மாயா

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

மாயத்திருடன் கண்ணா கண்ணா

காமக் கலைஞன் கண்ணா கண்ணா

மாயத்திருடன் கண்ணா கண்ணா

காமக் கலைஞன் கண்ணா கண்ணா

க்ருஷ்ணா

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல

இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல

நீ இல்லாமல் நான் இல்லையே

உன்னைக் காணாமல்

உன்னைக் காணாமல்

உன்னைக் காணாமல்

உன்னைக் காணாமல்

கமதநிஸ நித பம கம ரிகரிஸ

உன்னைக் காணாமல்

பெண் நெஞ்சு தடுமாறுதே

விதை இல்லாமல் வேரில்லையே

நளின மோக ஷியாமள ரங்கா

தீம் தீம் க்டதகதின்னா

நடன பாவ ஸ்ருதிலயகங்கா

க்டதகதின் தீம் தீன்னா

சரிவர தூங்காது வாடும்

அனுதினம் உனக்காக ஏங்கும்

ராதா தான் உனக்கென

ராதா தான் உனக்கொரு

ராதா தான்

அவ்வாறு நோக்கினாள்

எவ்வாறு நாணுவேன்

கண்ணாடி முன்நின்று

பார்த்து கொண்டேன்

ஒன்றாகச் செய்திட

ஒரு நூறு நாடகம்

ஒத்திகைகள் செய்து

எதிர்ப்பார்த்து இருந்தேன்

எதிர் பாராமலே... அவன்

எதிர் பாராமலே அவன்

ஓஓஓ பின்னிருந்து வந்து எனை

பம்பரமாய் சுழற்றி விட்டு

உலகுண்ட பெரு வாயன் எந்தன்

வாயோடு வாய் பதித்தான்

இங்கு பூலோகம் என்று

ஒரு பொருள் உள்ளதை

இந்த பூங்கோதை மறந்தாளடி

உடலணிந்த ஆடை போல்

எனை அணிந்து கொள்வாயா

இனி நீ. இனி நீ... கண்ணா

தூங்காத என் கண்ணின்

துயிலுரித்த கண்ணன் தான்

இனி நீ இனி நீ...

இது நேராமலே நான்

உன்னை பாராமலே நான்

இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்

என்று அதை எண்ணி

வீண் ஏக்கம் ஏங்காமலே

உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா

மாயத்திருடன் கண்ணா கண்ணா

காமக் கலைஞன் கண்ணா கண்ணா

மாயத்திருடன் கண்ணா கண்ணா

காமக் கலைஞன் கண்ணா கண்ணா

மாயத்திருடன் கண்ணா கண்ணா

காமக் கலைஞன் கண்ணா கண்ணா

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்