கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: பெற்றால்தான் பிள்ளையா

ஆண்டு:1966

இசை:M.S.V

வரிகள்:வாலி

பாடியவர்கள்:T.M.S & P.சுசீலா

✨✨✨✨✨✨✨✨✨

கண்ணன் பிறந்தான்

எங்கள் கண்ணன் பிறந்தான்

புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

மன்னன் பிறந்தான்

எங்கள் மன்னன் பிறந்தான்

மனக் கவலைகள் மறந்ததம்மா

கண்ணன் பிறந்தான்

எங்கள் கண்ணன் பிறந்தான்

புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

மன்னன் பிறந்தான்

எங்கள் மன்னன் பிறந்தான்

மனக் கவலைகள் மறந்ததம்மா

பிள்ளை மொழியோ

அது கிள்ளை மொழியோ

வெள்ளை மனமோ

அன்பைக் கொள்ளையிடுமோ ஓ.ஹோ ஓஒ ஓ

பிள்ளை மொழியோ

அது கிள்ளை மொழியோ

வெள்ளை மனமோ

அன்பைக் கொள்ளையிடுமோ

முத்து சிரிப்போ

அது முல்லை விரிப்போ

நித்தம் கத்தும் குயிலோ

அது கண்ணன் குரலோ

ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ

ஹோ ஓ ஓ ஓ ஓ

முத்து சிரிப்போ

அது முல்லை விரிப்போ

நித்தம் கத்தும் குயிலோ

அது கண்ணன் குரலோ

என்னை மறந்தேன்

நான் உன்னை மறந்தேன்

இன்று தன்னை இழந்தேன்

சுகம் தன்னில் விழுந்தேன்

கண்ணன் பிறந்தான்

எங்கள் கண்ணன் பிறந்தான்

புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

மன்னன் பிறந்தான்

எங்கள் மன்னன் பிறந்தான்

மனக் கவலைகள் மறந்ததம்மா

கன்னங்கருப்போ

சுடும் கண்கள் நெருப்போ

என்ன நினைப்போ

அது இன்பத்தவிப்போ

ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ

ஹோ ஓ ஓ ஓ ஓ

கன்னங்கருப்போ

சுடும் கண்கள் நெருப்போ

என்ன நினைப்போ

அது இன்பத்தவிப்போ

தொட்ட குறையோ

முன்பு விட்ட குறையோ

அது எண்ணத் துடிப்போ

இல்லை என்ன நடிப்போ (2)

கண்ணை அளந்தேன்

அதில் பொன்னை அளந்தேன்

பிள்ளை நெஞ்சை அளந்தேன்

புதுப் பூவை அளந்தேன்

கண்ணன் பிறந்தான்

எங்கள் கண்ணன் பிறந்தான்

புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

மன்னன் பிறந்தான்

எங்கள் மன்னன் பிறந்தான்

மனக் கவலைகள் மறந்ததம்மா

ஆஆ..ஹா..ஆஆஆஅ.ஆ.

கண்ணில் எடுத்தேன்

நெஞ்சைக் கையில் கொடுத்தேன்

சொல்லத் துடித்தேன்

அதை சொல்லி முடித்தேன்

சொல்லத் துடித்தேன்

அதை சொல்லி முடித்தேன்

ராதை நினைப்பாள்

அங்கு கண்ணன் இருப்பான்

அந்த கோதை சிரிப்பாள்

அதைக் கண்டு ரசிப்பான்

அதைக் கண்டு ரசிப்பாள்

ஒன்றை நினைத்தேன்

அந்த ஒன்றை அடைந்தேன்

உண்மை அன்பைத் தருவேன்

அந்த அன்பைப் பெறுவேன்

கண்ணன் பிறந்தான்

எங்கள் கண்ணன் பிறந்தான்

புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

மன்னன் பிறந்தான்

எங்கள் மன்னன் பிறந்தான்

மனக் கவலைகள் மறந்ததம்மா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்