மன்னவனே மன்னவனே மாலையிட்ட தென்னவனே

 ✨✨✨✨✨✨✨✨

படம்:கோட்டை வாசல்

இசை:தேவா

பாடியவர்கள்:S.P.B & K.S.சித்ரா

✨✨✨✨✨✨✨✨✨

மன்னவனே மன்னவனே மாலையிட்ட தென்னவனே

உன்னப்போல யாரும் இல்ல தலைவா தலைவா

சின்னக்கிளி அன்னக்கிளி

சேலை கட்டும் வண்ண கிளி

என்ன வேணும் கேளு நான் தரவா தரவா

உன்ன நெனச்சித்தான் நான் நிதமும் தான்

என் தலைவாரி பூச்சூடினேன்

ஒரு நாளும் பூவும்

பொட்டும் வாடாது மானே

மன்னவனே மன்னவனே

மாலையிட்ட தென்னவனே

உன்னப்போல யாரும் இல்ல தலைவா தலைவா

ராசாத்தி எனத்தொடத்தான்

லேசாக விரல் படத்தான்

ஆறாத காயம் எல்லாம் ஆறிப்போகுமே

ராசா உன் உடம்புலதான்

பூங்காத்து ஒரசிடத்தான்

பாத்தாலே ஏம்மனசு பதறிப் போகுமே

சாமியுண்டு காவலுக்கு

அச்சப்பட தேவயில்ல

மாமன் மேல ஈ எறும்பு

மொச்சாலும் தான் தாங்கவில்ல

கலையாத வாசம் நான் கொண்டாடும் நேசம்

நிலையான உறவென்று வரலாறு பேசும்

மன்னவனே மன்னவனே மாலையிட்ட தென்னவனே

உன்னப்போல யாரும் இல்ல தலைவா தலைவா

 தாயாக தவிச்சிருந்தேன்

தவமான தவமிருந்தேன்

தாலாட்டும் பாக்கியத்த தந்த மன்னவா

நான்தான் உன் தலப்ரசவம்

நலமாக தெனம் தெனமும்

ஆத்தால வேண்டி வந்தேன் போதுமல்லவா

உன்னுடைய பாசத்துக்கு நன்றி

சொல்ல வார்த்த இல்ல

 உன்ன இன்றி வாழ்வதற்கு

மண்ணில் ஒரு வாழ்க்க இல்ல

 உசுராகத்தானே நான் உறவாடுவேனே

ஒருபோதும் இரு ஜீவன் பிரியாது மானே

மன்னவனே மன்னவனே மாலையிட்ட தென்னவனே

உன்னப்போல யாரும் இல்ல தலைவா தலைவா

உன்ன நெனச்சித்தான் நான் நிதமும் தான்

என் தலைவாரி பூச்சூடினேன்

ஒரு நாளும் பூவும் பொட்டும் வாடாது மானே

மன்னவனே மன்னவனே மாலையிட்ட தென்னவனே

உன்னப்போல யாரும் இல்ல தலைவா தலைவா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்