பனியில் நனையும் மலர்கள் ரெண்டு புதிதாய் கவிதை எழுதும் இன்று

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் :ப்ரியா ஓ ப்ரியா

ஆண்டு:1983

பாடியவர்கள்: மனோ,K.S.சித்ரா

இசை:இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

பெண்: ￰லலல லலல லலல லலல

லலல லலல லலல லலல

ஆண்: ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

ஆஹா ஹா ஹாஹாஹா லாலாலாலாலாலாலாலா

ஆண்: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு

புதிதாய் கவிதை எழுதும் இன்று

பெண்: : மழை தூறலிலும் மழைச்சாரலிலும்

குளிர் கொண்டது மலர் செண்டு

பெண்: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு

ஆண்: புதிதாய் கவிதை எழுதும் இன்று

ஆண்: கண்ணோடு நீ விடும் கலை வண்ணமே

கண் மூடும் பொழுதிலும் உன் எண்ணமே

பெண்: இளவேனிற் காலமும் பிறந்தது மெல்ல

பூந்தென்றல் காதோடு உன் பெயர் சொல்ல

ஆண்: விதை மீது ஒரு நாள் வான்மழை துளி

விழும்போது மலரும் சிறு பூச்செடி

பெண்: ஒரு நாள் திருநாள் நாளை வரலாம்

கேட்கும் எல்லாம் கண்ணன் பெறலாம்

ஆண்: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு

புதிதாய் கவிதை எழுதும் இன்று

பெண்: நீ இன்றி வாழ முடியாதய்யா

நான் தேடும் பொழுதிங்கு விடியாதய்யா

ஆண்: நீ வேறு நான் வேறு இனி இல்லையே

நான் தூங்க வேறொரு மடி இல்லையே

பெண்: நாள்தோறும் வந்திங்கு இளைப்பாறு

நீராட நானொரு தேனாறு

ஆண்: தென்றல் நாளும் தீண்டும் பூவே

கரை மேல் இறங்கி நடக்கும் நிலவே

பெண்: பனியில் நனையும் மலர்கள் ரெண்டு

புதிதாய் கவிதை எழுதும் இன்று

ஆண்: மழை தூறலிலும் மழைச்சாரலிலும்

குளிர் கொண்டது மலர் செண்டு

இருவரும்: லலல லலல லலல லலல

லலல லலல லலல லலல

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்