ஓ வானம்பாடி (சாதனை)

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:சாதனை

ஆண்டு:1986

வரிகள்:புலமைப்பித்தன்

பாடியவர்கள்:S.P.B &S.ஜானகி

இசை:இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

✨✨✨✨✨✨✨✨✨

ஆஆ..ஆஆ..ஆ..ஆ.

ஆஅ..ஆ..ஆ..

ஆஅ..ஆ..ஆ..

ஆ.ஆ..ஆ.

ஆ..ஆ..ஆ.

ஆஅ.ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

ஓ வானம்பாடி உன்னை நாடி

எங்கும் தேடி

நெஞ்சில் சூடி இன்பம் கோடி

ஓ வானம்பாடி உன்னை நாடி

எங்கும் தேடி

நெஞ்சில் சூடி இன்பம் கோடி

காண ஏங்கினேன் நாளும் வாடினேன்

ஓ வானம்பாடி உன்னை நாடி

எங்கும் தேடி

நெஞ்சில் சூடி இன்பம் கோடி

போகமே என் யோகமே

என் காதல் ராகமே

கீதமே என் வேதமே

என் ஜீவ நாதமே

பாவை உந்தன்

பாதமே பாரிஜாதமே

பாதை எங்கும்

பூவனம் தாது தூவுமே

மண்ணில் சொர்க்கம் வந்ததே

மார்பில் சாய்ந்து கொண்டதே

சிந்தாத முத்துக்கள்

செவ்வாயில் சிந்தக் கண்டேன்

ஓ வானம்பாடி உன்னை நாடி

எங்கும் தேடி

நெஞ்சில் சூடி இன்பம் கோடி

ஆஅ.ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

ஆஅ.ஆ..ஆ..ஆ

ஆஅ.ஆ..ஆ..ஆஆஅ..ஆ..

மன்னவன் கண் மூடினால்

என் வானில் ராத்திரி

மங்கையே உன் பார்வைதான்

என் வானில் வைகறை

இன்பம் என்னும் வேதனை

இன்று பார்க்கிறேன்

நானும் கொஞ்சம் சோதனை

போட்டுப் பார்க்கிறேன்

காற்று வண்டு தீண்டுமோ

கற்பு என்ன ஆகுமோ

பூங்காற்றும் தீண்டாமல்

நீ என்னை கட்டிக் கொள்வாய்

ஓ வானம்பாடி உன்னை நாடி

எங்கும் தேடி

நெஞ்சில் சூடி இன்பம் கோடி

காண ஏங்கினேன் நாளும் வாடினேன்

ஓ வானம்பாடி உன்னை நாடி

எங்கும் தேடி

நெஞ்சில் சூடி இன்பம் கோடி

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்