இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: சாந்தி நிலையம் 

வரிகள் :கண்ணதாசன்

 இசை: எம்.எஸ் விஸ்வநாதன் 

பாடியவர் :பி சுசீலா 

ஆண்டு 1969

✨✨✨✨✨✨✨✨✨

இறைவன் இறைவன் இறைவன்

வருவான் வருவான் வருவான்

ஆஹா ஆஹா ஆஹா

ஆஹஅஹா ஆ ஆ ஆஆஹா ஆஅ

இறைவன் வருவான்

அவன் என்றும் நல்வழி தருவான்

இறைவன் வருவான்

அவன் என்றும் நல்வழி தருவான்

அறிவோம் அவனை

அவன் அன்பே நாம் பெரும் கருணை

அறிவோம் அவனை

அவன் அன்பே நாம் பெரும் கருணை

இறைவன் வருவான்

அவன் என்றும் நல்வழி தருவான்

வண்ண வண்ணப் பூவில்

காயை வைத்தவன்

சிற்பி ஒன்றின் நடுவே

முத்தை வைத்தவன்

வண்ண வண்ணப் பூவில்

காயை வைத்தவன்

சிற்பி ஒன்றின் நடுவே

முத்தை வைத்தவன்

சின்ன சின்ன நெஞ்சினில்

பாசம் வைத்தான்

நெஞ்சில் வரும் பாசத்தை

பேச வைத்தான்

சின்ன சின்ன நெஞ்சினில்

பாசம் வைத்தான்

நெஞ்சில் வரும் பாசத்தை

பேச வைத்தான்

அன்பே என்பது கோயில்

ஆசை என்பது நாடு

பாசம் என்பது வீடு

பாசம் என்பது வீடு

இறைவன் வருவான்

அவன் என்றும் நல்வழி தருவான்

உள்ளம் என்னும் கோயிலை

கட்டி வைத்தவன்

கண்கள் என்னும் வாசலை

தந்து வைத்தவன்

உள்ளம் என்னும் கோயிலை

கட்டி வைத்தவன்

கண்கள் என்னும் வாசலை

தந்து வைத்தவன்

கண்ணில் வரும் பாதையை

காண சொன்னான்

நல்ல நல்லப் பாதையில் போக சொன்னான்

கண்ணில் வரும் பாதையை

காண சொன்னான்

நல்ல நல்லப் பாதையில் போக சொன்னான்

கண்கள் அவனை காண

உள்ளம் அவனை நினைக்க

கைகள் அவனை வணங்க

கைகள் அவனை வணங்க

இறைவன் வருவான்

அவன் என்றும் நல்வழி தருவான்

அறிவோம் அவனை

அவன் அன்பே நாம் பெரும் கருணை

இறைவன் வருவான்

அவன் என்றும் நல்வழி தருவான்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்