எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : நினைக்கத் தெரிந்த மனமே (1987)

இசை : இசைஞானி

பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா

பாடலாசிரியர் : காமகோடியன்

✨✨✨✨✨✨✨✨

பெண் : எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னைத் தேடும்

ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும்

காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பெண் : பூங்காற்று தாலாட்டும்

அன்பே அன்பே

ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னைத் தேடும்

ஆண் : கண்களின் பார்வை அம்புகள் போலே

நெஞ்சினிலே.. பாய்வதும் ஏன்

அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது

காயங்களும் ஆறியதேன்

பெண் : ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம்

பிரிந்தது ஏனோ உன் உறவு

நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும்

மயங்குவதேனோ என் மனது

ஆண் : இருநெஞ்சின் துன்பம்

இது காதல்தான்

அது போல இன்பம் எது கண்மணி

பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

பெண் : எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னைத் தேடும்

ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும்

காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பெண் : பூங்காற்று தாலாட்டும்

அன்பே அன்பே

ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

பெண் : மாலை நன் நேரம்

மாறிட வேண்டாம்

மாங்குயிலே மாங்குயிலே

காலங்கள் கூட மாறிட வேண்டாம்

கண்மணியே கண்மணியே

ஆண் : சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்

சந்திரன் அங்கே வந்திடட்டும்

மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்

கடலினில் கூட அலை நிற்கட்டும்

பெண் : உன்னோடு சேரும் ஒரு நேரமே

என்றென்றும் இங்கே நிலையாகட்டும்

பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும்

காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பெண் : பூங்காற்று தாலாட்டும்

அன்பே அன்பே

ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

இருவர் : லாலா லா லா லா

லாலா லா லா லா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்