அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : சிறையில் பூத்த சின்ன மலர் 

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : அதிசய நடமிடும்

அபிநய சரஸ்வதியோ….

நகை அரும்பிய திருமுகம்

அழகிய முழுமதியோ….

ஆண் : அதிசய நடமிடும்

அபிநய சரஸ்வதியோ…..

நகை அரும்பிய திருமுகம்

அழகிய முழுமதியோ…..

ஆண் : சுதியொடு லயங்களும் கூட

சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட

சுதியொடு லயங்களும் கூட

சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட

இவளென்ன எனக்கென பிறந்தவளோ..

பெண் : அதிசய நடமிடும்

அபிநய சரஸ்வதியோ…..

நகை அரும்பிய திருமுகம்

அழகிய முழுமதியோ……

ஆண் : நெஞ்சை அள்ளும் ஆடை கொண்ட

தஞ்சை கோபுரம் நீ

நேரில் வந்து தாகம் தீர்க்கும்

தீர்த்தப் பாத்திரம்

பெண் : வண்டு வந்து தங்கத்தானே

வண்ணத்தாமரை

ஓர் தண்டு கொண்டு நீரில் நிற்கும்

உள்ள நாள் வரை

ஆண் : அந்தி வெய்யில் சாயும்போது

அன்பு வெள்ளம் பாயும்போது

சிந்து ஒன்று பாட

துணை நான் இல்லையோ

பெண் : தொட்டு தொட்டு நீயும் கெஞ்ச

விட்டு விட்டு நானும் கொஞ்ச

கட்டில் ஒன்று போட

மணநாள் இல்லையோ

ஆண் : திருமணம் புரிவது என்று

துடிக்கிது இளமனம் இன்று

அதுவரை உணர்ச்சிகள் அடங்கிடுமோ

பெண் : அதிசய நடமிடும்

அபிநய சரஸ்வதியோ…..

நகை அரும்பிய திருமுகம்

அழகிய முழுமதியோ……

பெண் : சுதியொடு லயங்களும் கூட

சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட

சுதியொடு லயங்களும் கூட

சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட

இவளென்ன உனக்கென பிறந்தவளோ..

ஆண் : அதிசய நடமிடும்

அபிநய சரஸ்வதியோ….

நகை அரும்பிய திருமுகம்

அழகிய முழுமதியோ….

பெண் : கண்கள் என்ன நெஞ்சில் பாயும்

காம பாணமோ

உன் சொற்கள் என்ன போதை

ஏற்றும் சோம பானமோ

ஆண் : சின்னப்பெண்ணின் வார்த்தை என்ன

சங்கப் பாடலோ

நீ சிந்துகின்ற பார்வை என்ன

ஸ்வர்க்க வாசலோ

பெண் : என்றும் உள்ள சொந்தம் என்று

ஏழு ஜென்ம பந்தம் என்று

நெஞ்சில் கொண்ட நேசம்

இது நீங்காதது

ஆண் : அன்றில் ரெண்டு ஒன்றை ஒன்று

அட்டைப்போல ஒட்டிக்கொண்டு

இன்று காணும் இன்பம்

நிறம் மாறாதது

பெண் : வளருது வளருது மோகம்

விளையுது விளையுது தாகம்

இனி இந்த விழிகளில் உறக்கமுண்டோ

ஆண் : அதிசய நடமிடும்

அபிநய சரஸ்வதியோ….

பெண் : நகை அரும்பிய திருமுகம்

அழகிய முழுமதியோ….

ஆண் : சுதியொடு லயங்களும் கூட

சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட

பெண் : சுதியொடு லயங்களும் கூட

சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட

ஆண் : இவளென்ன எனக்கென பிறந்தவளோ..

பெண் : அதிசய நடமிடும்

அபிநய சரஸ்வதியோ…..

ஆண் : நகை அரும்பிய திருமுகம்

அழகிய முழுமதியோ……

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்