என்னவளே அடி என்னவளே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:காதலன்

ஆண்டு:1994

வரிகள்: வைரமுத்து

பாடகர்: உன்னிகிருஷ்ணன்

இசை:ஏ.ஆர்.ரகுமான்

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : என்னவளே அடி என்னவளே…

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…

எந்த இடம் அது தொலைந்த இடம்…

அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…

உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று…

உந்தன் காலடி தேடி வந்தேன்…

ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று…

உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்…

எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து…

இரு கண்விழி பிதுங்கி நின்றேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…

ஆண் : வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்…

இன்று வசப்படவில்லையடி…

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா…

ஒரு உருண்டையும் உருலுதடி…

ஆண் : காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்…

ஒரு நிமிஷமும் வருஷமடி…

கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்…

ஒரு கலக்கமும் தோன்றுதடி…

ஆண் : இது சொர்க்கமா நரகமா…

சொல்லடி உள்ளபடி…

நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்…

உன் வார்த்தையில் உள்ளதடி…

ஆண் : என்னவளே அடி என்னவளே…

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…

ஆண் : கோகிலமே நீ குரல் கொடுத்தால்…

உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன்…

கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு…

உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்…

ஆண் : வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க…

உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்…

வருடவரும் பூங்காற்றையெல்லாம்…

கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்

ஆண் : என் காதலின் தேவையை…

காதுக்குள் ஓதிவைப்பேன்…

உன் காலடி எழுதிய கோலங்கள்…

புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…

எந்த இடம் அது தொலைந்த இடம்…

அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…

உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று…

உந்தன் காலடி தேடி வந்தேன்…

ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று…

உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்…

எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து…

இரு கண்விழி பிதுங்கி நின்றேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்