சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு ஏனடி நீங்கினையாே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:பொன்னியின் செல்வன் 2 

பாடகர் : ஹரிச்சரண்

இசை  : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன்

ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு

ஏனடி நீங்கினையாே

ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே

செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண் : அத்தம் அழிந்ததடி அன்னமே

ரத்தமும் ஓய்ந்ததடி

ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே

யாதினி கொள் யானே

ஆண் : யாங்குனை தேடுவனோ அன்னமே

ஏதினி செய்குவனோ

போங்கூழ் ஆனதடி அன்னமே

தீங்கிருள் சூழ்ந்ததடி

ஆண் : துள்ளும் நாயனமெங்கே வெல்லம் போல்

சொல்லும் மொழிகள் எங்கே

கன்னல் சிரிப்புமெங்கே என்னை சேர்

ஆரண மார்புமெங்கே

ஆண் : மஞ்சின் இளங்குளிராய்

நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே

கொஞ்சும் இளம் வெயிலாய்

என்னையே தேடிடும் பார்வை எங்கே

ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு

ஏனடி நீங்கினையாே

ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே

செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண் : கானகம் எரியுதடி வஞ்சியே

ஞாலமும் நழுவுதடி

வானம் உடைந்ததடி அழகே

பூமியும் சரிந்ததடி

ஆண் : கொள்ளை நெருப்பினிலே தள்ளியே

எப்படி நீங்குதியோ

எற்றடி குற்றமுற்றேன் பிரிவை

சாபமாய் தந்தனையோ

ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு

ஏனடி நீங்கினையாே

ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே

செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண் : அத்தம் அழிந்ததடி அன்னமே

ரத்தமும் ஓய்ந்ததடி

ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே

யாதினி கொள் யானே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்