கற்பூர பொம்மை

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:கேளடி கண்மணி

இசை:இளையராஜா

ஆண்டு:1990

பாடியவர்:P.சுசீலா

வரிகள்:வாலி

✨✨✨✨✨✨✨✨✨

கற்பூர பொம்மை ஒன்று

கை வீசும் தென்றல் ஒன்று

கலந்தாட கை கோர்க்கும் நேரம்

கண்ணோரம் ஆனந்த ஈரம்

முத்தே என் முத்தாரமே சபை ஏறும்

பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா


கற்பூர பொம்மை ...


பூந்தேரிலே நீ ஆடவே

உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்

ராஜாங்கமே ஆனந்தமே

நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்

மானே உன் வார்த்தை ரீங்காரம்

மலரே என் நெஞ்சில் நின்றாடும்

முத்தே என் முத்தாரமே

சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

 

கற்பூர பொம்மை ....


தாய் அன்பிற்கே ஈடேதம்மா

ஆகாயம் கூட அது போதாது

தாய் போல் யார் வந்தாலுமே

உன் தாயை போலே அது ஆகாது

என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்

உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்

முத்தே என் முத்தாரமே

சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

 

கற்பூர பொம்மை ....

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்